Saturday, November 30, 2013

2013 நவம்பர்-ல் facebook











நவம்பர் 2013 ல் facebook 

  • டார்வின் தியரியை பொய்யெனச்சொல்லவில்லை என் செயல்.
  • எனக்கும் எனக்கும் மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது.
    ஜெயிக்கப்போவது யாரென்று தெரியவில்லை.
  • 64 பாகம் கொண்ட சங்கிலி கருப்பரை தேடிக்கொண்டிருக்கிறேன்.
    இன்னும் கிடைத்தாரில்லை.
  • கார்பனும் நைட்ரஜனும் சேர்ந்து செய்த கலவை நான்.
  • ஒரு கவிதைக்கான சூழல் நிலவிக் கொண்டிருக்கும் போதே
     அதற்கான வார்த்தைகளை தேடத்துவங்கிவிடு.
  • குடிக்க குடிக்க சுகம்.... சுடுதண்ணிய சொன்னேன்.
  • இந்த இரவு முடிவதற்குள் நிலாவை பற்றி ஒரு கவிதையாவது எழுதிவிட எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
    நிலா
    அழகு
    கவிதை
    இந்த மூன்று வார்த்தைகளைத்தவிர வேறெதையும் நான் எழுதியிருக்க மாட்டேன்.
  • ஹலோ..சுதாகர் எப்டி இருக்க...
    சுதாகர் இல்லையே... நீங்க யாரு...?
    சென்னை நம்பர் தானே இது...?
    இல்லங்க நீங்க நம்பர் மாத்தி அடிச்சிட்டிங்க...
    சரி மன்னிச்சுருங்க...# மன்னிக்க தெரிஞ்சவனோட மன்னிப்பு கேட்பவன் பெரிய மனுஷன்.
  • மந்திரிசபை மாற்றம் முதல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு வரை. நான் போட்ட உத்தரவுகள் தூக்கத்தில் உளறியது என்ற செய்தி நாளை வருமானால் அ.தி.மு.க. வினரின் நேற்றைய விவாதம் கண்டு யாரும் சிரிக்கக்கூடாது.
  • கைகூடா காதலர்கள் சந்தித்துக் கொள்ளும்போது கடைபிடிக்கவேண்டிய அதிக பட்ச நாகரீகம்.
    கள்ளமில்லா ஒற்றைப்புன்னகையுடன் கடந்துவிடுவது.
  • நிலா .
    ஒப்புவமையிலாஅழகுப் பெண்.
    இரவுகளுக்கு சொந்தக்காரி.
    நட்சத்திரங்களுக்கு தோழிப் பெண்.
    கவிஞர்களுக்கெலாம் கனவுப் பெண்
    இவளின்றி அமையாது கவிதை .
     # சுட்ட கவிதை... எங்கிருந்துன்னு கேட்கக்கூடாது.
  • இன்றைய சில நிகழ்வுகள் என் மண்டைக்குள் alprazolam மருந்தை செலுத்தியிருக்கிறது. நிம்மதியாய் தூங்குவேன்.
  • சூனியமாகத்துடிக்கும் இன்றைய மணித்துளிகளுக்கு ஏதேனும் மந்திரம் ஓதிவிடவேண்டும்.
  • ம்ம்ம் இப்போ என்ன ஸ்டேடஸ் போடலாம்...
    குலாப் ஜாமூன் நல்லா இனிப்பா இருந்துச்சின்னு போடலாமா...
    குடிக்க குடிக்க சுகமா இருந்துச்சின்னு போடலாமா.... (சுடுதண்ணி)
    ஒரே தலைவலி... அப்டின்னு போடலாமா...
    எதுவுமே தோன மாட்டேங்குதுன்னு போடலாமா...
    தீவிரமா யோசிச்சிட்டு இருக்கேன்...
    எதையாவது போட்டே ஆகணும்.
  • 200 டெஸ்ட் விளையாண்டதுக்கு சச்சினுக்கு அஞ்சல் தலை...
    10 வருசத்துக்கும் மேல் உண்ணாவிரதம் இருந்துட்டு இருக்க இரோம் ஷர்மிளாவுக்கு... வெறும் பட்னி தான் தலையெழுத்தா...
  • நேற்றிருந்த எதுவும் இன்றில்லை. பிரபஞ்ச வெளியில் எல்லாம் கரைந்து போகிறது.
  • ஆளில்லாத உயர்ந்த மலையும், அடர்ந்து இருண்ட காடும், குறுகிப்போன குகையும், அகண்ட பாலைவனமும் வேண்டும் என் மனக்குமுறலை எதிரொலிக்க.
  • தூக்கம் வருமா தெரியாது.
    கனவு மட்டும் வரும்.
  • இந்த இரவின் குரல் கொன்னக்கோல் வாசித்தபடியே கரைத்து போகிறது.
  • கோட்டோவியமாக காமராஜரின் உருவம் வரைய எத்தனிக்கிறேன்...
    நேர்(மை) கோட்டிலிருந்து சற்றும் கூட வளைந்து கொடுக்க மறுக்கிறார்.
  • ( ) இந்த அடைப்பிற்குள் எத்தனை புள்ளிகள் மறைந்திருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது...
    ஆனால் ( ) இந்த அடைப்பிற்குள் உள்ள புள்ளிகளை மேல் அடைப்பிலுள்ள புள்ளிகளுடன் கழித்துப் பார்த்தால் புள்ளிகளே இல்லை என்று வருகிறது.
  • நல்லவன் மாதிரியே, ஈழ தமிழ்ல, அதே slang ல பேசுரான்யா டக்லஸ் தேவானந்தா..!!
  • ஓராயிரம் கவித்துளிகளுக்கான மழைத்துளியை பெய்து தந்திருக்கிறது இந்த பருவநிலை.
  • எந்த குதூகலத்திற்கும் இடமளிக்க மறுத்தே கடல் கலக்க ஓடிக்கொண்டிருக்கிறது இந்த ஓடை.
  • இந்த இரவுப்பாலம் அதி பயங்கரமானது...
    கற்களும், முட்களும், கம்பிகளும், கனவுகளும் நிறைந்தே கிடக்கும்.
  • காசு, பணம், துட்டு... எல்லாம் செலவானபின் எஞ்சியிருக்கும் நேரத்தையும் செலவுசெய்து கொண்டிருக்கிறேன்.
  • useless fellow" இது எனக்குப் பொருத்தமாயிருக்கிறது.
  • வாழ்வு... சிலருக்கு வரம். சிலருக்கு சாபம்.
    மரணம்... சிலருக்கு வரம். சிலருக்கு சாபம்.
  • பேயோன் facebook லிங்க் இருக்கா... யார்ட்டயாவது.
  • கடந்துபோன இரவு இன்னும் கொஞ்சம் நீண்டு, கடந்து போகாமலிருந்திருக்கலாம்.
  • அடர்மரங்களை எல்லாம் அழித்துக் கிளம்பிய அந்த கல்லூரி வளாக மூலையில் ஒற்றை நெட்லிங்க மர உச்சியிலிருந்து... எழுத்தால் நிரப்ப இயலா ஓசையில் கூவுகிறது அந்த மணிப்புறா.
  • நேத்து பிரபல தொலைகாட்சில ஒரு நிகழ்ச்சி....
    பல பிரபலங்கள் ! கலந்துகிட்ட நிகழ்ச்சி...
    அவர்களிடம் நிகழ்ச்சி நெறியாளர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா...?
    "முக்கோணத்துக்கு எத்துனை கோணம்". இந்த கஷ்டமான கேள்விக்கு
    அந்த பிரபலங்கள் மிச்சரியா !! "மூணு கோணம்" நு பதில் சொல்லிட்டாங்க...
    உடனே சுத்தியிருந்த பார்வையாளர்கள் எல்லாம் ஒரே கை தட்டல்.
    அப்புறம் ஏன் நாம் அப்டியே இருக்க மாட்டோம்...
  • விஞ்ஞானி என்று அறியப்பட்ட சி.என்.ஆர். ராவ்.
    பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்று உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.என்.ஆர். ராவ். அரசியல் வாதிகளை முட்டாள்கள் என்று சொல்கிறார்...
    அதற்க்கு நீங்கள், அவர் ஏதோ புரியாமல் பேசுகிறார் என்கிறீர்கள்.
    இது தானா உங்க டக்கு...
  • உனக்குள் இருக்கும் வரை அது ரகசியம் தான்.
  • வேற்றுக்கிரகவாசி ஒருவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது இன்று.
    எனக்கும் அவனுக்குமான உரையாடலின் முதல் வார்த்தை, "என்ன சாப்டிங்க..."
  • பெண்கள் மீதான குடும்ப வன்முறையின் வடிவம் மாறியிருக்கிறதே தவிர, அது இன்னும் குறையவில்லை என்பதை பல தொலைக்காட்சி நிகழ்சிகளின் மூலம் பார்க்க முடிகிறது.
  • சிக்கல் நிறைந்த உளவியலை உடைக்கும்போதெல்லாம் ஒரு மிருகத்தின் சம்பட்டியடி பலமாகவே விழுந்துவிடுகிறது.
  • ரிமோட் கையிளில்லாமல் சன் டிவி பார்ப்பவர்கள் கல்லுளி மங்கர்களாக கருதப்படுவர்.
  • facebook பயன்பாட்டாளரை MOBILE, WEB ன்னு எழுத்தால தனித்தனியா காட்டுது chat list ல.
  • மூன்று வருடங்களாக படுக்கையிலிருந்த அம்மாவை பார்த்துக் கொண்டதற்காக பெரியண்ணன் தன் தம்பிக்கு கொடுத்த தொகை, பத்......தா...யிரம் ரூபாய்.
  • நான் சொல்ல நினைத்ததை நீ சொல்லியதால்
     நீ நானாகிறாய்.
  • விசயத்தை செல்லத்தொடங்கினான்,
    பேசத்தவர மட்டார்,
    பொறியில் படிப்பு ,
    அவர் சேர்வாக அமர்ந்தார் ,
    அங்கே பேய் சேர்ந்தார்.
    அவர் ஒரு புதிய தொனியில் கோட்டார்.

     இப்டிலாம் படிக்கிறேன்.
  • அவன கொண்ணு....
    அவங்குடும்பத்த அழிச்சி...
    அந்த குடும்பத்துல இருக்க ஒருத்தர கூட நிம்மதியில்லாம நடுத்தெருவுல நிறுத்துற அன்னிக்கி தான் எனக்கு நிம்மதியாவே இருக்கும்...

     # தமிழ் சீரியல் கத்துக்குடுக்கும் பாடம்.
  • சுமைகூடி கடந்த நிமிடங்களுக்கு மத்தியில்
    எங்கிருந்தோ எடை குறைக்க வந்த அந்த
    எதிர்பார்த்தும், எதிர்பாரா ப்ரியம்...
    காட்டிக்கொள்ள விரும்பாத அந்த அக்கறை .
    சோர்வுறும்போதெல்லாம் தட்டியெழுப்பிய அந்த எழுத்துக்கள்.
     எங்கும் தொய்வை திணிக்காமல் நகர்த்திச்செல்கிறது.
  • பொடி தோசைக்கு புதினா சட்னியும், தேங்காய் சட்னியுமாக துணைசெய்தபோது, பிரபல செய்தி சேனலில் "ஆந்திராவில் மழைக்கு வாய்ப்பு" என்ற செய்தி...
    அப்படி என்ன வாய்ப்பளிக்க போகிறார்கள்... ஆந்திராவில்.
    தமிழகத்தில் செய்யாத கவிதையை விடவா வாய்ப்பளித்துவிட போகிறார்கள் அந்த மழைக்கு...?
     சத்தியமாக பேயோன் எனக்குள் இல்லை.
  • செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள்.
     அடக்கி வாசிங்க விஞ்ஞானிகளே..
  • நீங்கள் உதறிய நிலைத்தகவல்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த அளவில் Like or Comment வரவில்லை என்றால்... எங்கோ நான்கு மணிநேர மின்வெட்டு அமலில் இருப்பதாக கொள்ளவும்.
  • விஸ்வநாதன் ஆனந்த் ஜி... சீசன் சரியில்ல. ஒரு crocin போட்டுட்டு விளையாடுங்க.
  • என்னங்க.... வரும்போது சால்ட் உப்பு ஒரு பாக்கெட்டும், கல்லு உப்பு ஒரு பாக்கெட்டும் மறந்துறாம வாங்கிட்டு வந்துருங்க... # எங்கேயோ கேட்ட குரல்.
  • இன்னும் ஒரு மாதகாலத்திற்கு தினசரி, தினசரி கிழிக்கும் வேலையை இல்லாமல் செய்துவிட்டாள் ஒரு பூனை பூம் பூம்.
  • பத்து ரூபாய் எடுத்துப்போய் நாடார் கடையில் 50 தேங்காய் எண்ணெய், 2 ரூபாய்க்கு பொட்டுக்கடலை , 1 ரூபாய்க்கு தேங்காய் சில், ஒரு பொன்வண்டு சோப்பு வாங்கிட்டு பாக்கி காசும் வாங்கி வந்த கனவு ஒன்றை நேற்று இரவு கண்டேன். கனவு தான் காண முடியும்.
  • ஓர் ஊமைத்தாயின் தாலாட்டுக்காக விழித்துக் கிடக்கிறது என் உறக்கம்.
  • ஒரு கலைஞனுக்கு மரியாதை செலுத்துவதென்பதும், கௌரவிக்க வேண்டும் என்பதும் அவன் வாழும் காலங்களில் கொடுக்கப்பட வேண்டும். அதைவிடுத்து, அவன் இறந்த பின் சிலை வைப்பதும், பின்பு அதை அகற்றுவதும் மிகக்கேவலமான சிந்தனை.
  • "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" படத்திற்கு பின்னரான மிஷ்கினின் வார்த்தைகளில் கர்வம் கூடியிருக்கிறது.
  • வலி தாங்கமுடியாத பசு, தெளிவான வார்த்தையில் "அம்மா..." என்கிறது.
  • இந்த நீதி மன்றங்கள் இப்படி பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றன. செல்வாக்கு உள்ள மனிதர்கள் எதையும் சந்திக்க தயாராகவே இருப்பார்கள், இருக்கிறார்கள். இப்போதைக்கு ஒரு டீ சொல்லு மச்சி.
  • யோவ்.... ஒரு நாளைக்கு 24 மணி நேரம்யா.... ரொம்ப கஷ்டம். நீ வேணா ட்ரை பண்றியா...
  • facebook password மறந்து போச்சுன்னு அவனோட நண்பன் பத்துபேருக்கு போன் பண்ணி கேட்டு login பண்ற நண்பனெல்லாம் என் கூட இருக்கதாலதான் நானெல்லாம் சிரிக்கிறேன்.
  • ஒரே சளியா இருக்குன்னு சொன்னேன்...
     நண்பன் சொல்றான் wills ல vicks தடவி அடி சரியாகிடும்னு...நீங்க சொல்லுங்க... என்ன பண்ணலாம்.
  • அம்ருத வர்ஷினி ராகத்துல பாடினா மழை வருமாமே...
     பாடவா...
  • அவ்வப்போது வந்து ஒரு like விதை இட்டுப்போ...
     அப்போதான் எனக்குள் வார்த்தைகள் முளைவிடும். # முனியம்மாவுக்கு மட்டும்.
  • கரண்ட் போகப்போகுது.....
     நா log out பண்ணிட்டேன்.
  • வலுவிழந்த வாகனம்
    வறண்ட சன்னலோரங்கள்
    சுவாரஸ்யம் இல்லாத பயணம்
    இடையிடையே ஏறியவர்கள்
    இடையிடையே இறங்கியவர்கள்
    போகும் தூரம் எக்கணம் குறையும்
     என்ற எதிர்பார்ப்பில்.
  • கொட்டும் மழைத்துளிகளால்
    சிதரிக்கொண்டே இருக்கும் நிலாவை
     உள்ளங்கையில் சேர்க்கத் துடிக்கிறேன்.
  • அரும்பார்த்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கணினியில் ஆபாசப் படம் காண்பித்ததாக எழுந்த புகாரையடுத்து 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...# இந்த ஆசிரியருக்கெல்லாம் பொம்பள புள்ள இருந்தா எப்டி அதுங்க மூஞ்ச பாப்பாங்க.
  • ஓ... நீங்க எழுதுவிங்களா....
    எப்போவெல்லாம் எழுதுவிங்க...
     சும்மாருக்க டைரியும், தீராத மையும் வீணா போகுமேன்னு அப்போ அப்போ எழுதுவேன்.
  • USB port ல எதுவுமே செருகல USB Detected. Scan the driver for viruses now ன்னு கேக்குது. பேயா இருக்குமோன்னு பயமா இருக்கு.
  • மிகக்குறைவான நேரமே இருப்பதால் இலக்கை நிர்ணயிப்பதில் குழம்பி, இருந்த நேரத்தையும் வீணடித்து, எங்கேயோ செல்கிறது இந்த பாதை.
  • கற்பனையாக எழுதுவதை கூட பொய் எழுதாதே எனும் மனநிலையை எப்படி சீர்செய்யமுடியும்.
  • டாஸ்மாக் கும், ஃபேஸ்புக் கும் இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

2 comments:

  1. கற்களும், முட்களும், கம்பிகளும், கனவுகளும் நிறைந்தே கிடக்கும் உட்பட அனைத்தும் நல்லதொரு தொகுப்பு... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன் சார்.

    ReplyDelete