Monday, November 18, 2013

காரணம் வெங்காயம்

சித்தப்பா சுட்டிக்காட்டிய மணாளனுக்கு வாக்கப்பட்டு
புகுந்தகம் போயிருந்த முதல் தினமன்று .
ஆனந்த ஒலியும் ஆனந்த ஒளியும்
வியாபித்துக் கிடந்த புகுந்தகத்தில்
அவளின் முட்களற்ற கண்மீன்கள் இரண்டிலிருந்தும்
வெந்நீர் ஊற்றெடுத்து ததும்பிக் கொண்டிருந்ததை
அள்ளிப் பாய்ச்சிக்கொண்டிருந்தாள் அடுக்களையில்.
அவளின் கண்ணீருக்கு காரணம் கேட்பவர்களுக்கு
பதிலாய் வைத்திருந்தாள்
கையில் கத்தியும் வெங்காயமும் .


1 comment: