Monday, November 18, 2013

பேராபத்தான கவிதை

நான் எழுதப்போகும் இந்த கவிதையின்
முதல் வரி மனநோயாளியின் அம்மணத்தை மறைத்துவிடும்.
இரண்டாம் வரி ஆண்ட குடும்பத்திலிருந்து ஆண்டியாகிப் போனவன் வயிறை நிறைத்துவிடும்.
மூன்றாம் வரி எங்கோ நடந்த இனப்படுகொலைக்கு
நியாயம் பெற்றுத்தரும்.
நான்காம் வரியில் சாதிகளெல்லாம் ஒழிக்கப்பட்டுவிடும்.
ஐந்தாம் வரி ஆங்காங்கே நிகழும் வன்கொடுமைகளையும்
வன்முறைகளையும் ஒழித்துவிடும்.
ஆறாம் வரி நான் மட்டும் நல்லவனென எழுதப்படுகிறது.
ஏழாம் வரி என்னை விளம்பரப் படுத்திக்கொள்ள எழுதப்படுகிறது.
கடைசி வரி பேராபத்தை விளைவிக்கும் வார்த்தைகளை எழுதவைத்துவிடலாம்.

No comments:

Post a Comment