Monday, November 25, 2013

நான் பெற்றெடுக்காத என் மகளுக்காக

அந்தரக் கூத்தாடும் ஆலவிழு தொன்றை
தன்னுடன் கலந்து ஸ்பரிசித்துக் கொள்ள 
கொஞ்சம் கொஞ்சமாய்
மீட்டிக்கொண்டிருக்கிறது காற்று.

அன்பும் அக்கறையுமாக ஊற்றி வளர்த்த
தாய் மரத்தின் கிளை விழுது வேறுபக்கம் அசைந்து
சுவாசம் கொள்ளும்போது

தாய் மரம் தன் இருப்பின் மீதான
நிலைப்பாட்டிலிருந்து
தன்னை மீட்டுக்கொண்டு .

மேலும் மேலும் அன்பும் அக்கறையுமாகவே
ஊற்றி ஊற்றி கிளை விழுதினை பத்திரமாக
மண் பிடித்துக் கொள்ளச்செய்கிறது.

3 comments:

  1. /// Your Blog http://naanyaaro.blogspot.com is not listed in Tamilmanam. Please submit your blog to Tamilmanam

    Please click here to submit your blog to tamilmanam ///

    தளத்தை submit செய்தீர்களா...? or இன்னும் தகவல் வரவில்லையா...?

    ReplyDelete