Friday, November 15, 2013

பழகிப்போன வலி

பழகிப்போன வலி 

ஆறுவருடங்கள் வரை அவன் கருவாகவில்லையே என்று
அவர்கள் அழுதிருக்கவில்லை .

அவர்கள் மிதித்த மருத்துவமனைகளின் வாசல்படிகள்
குத்திக் கிழித்தது கூட அவர்களை அழச்செய்திருக்கவில்லை .

பெயர் உச்சரிக்க வராத ஊர்களுக்குச் சென்று
பச்சிலை அறைத்துக்குடித்ததெல்லாம்
அவர்களுக்கு கசந்து விட்டிருக்கவில்லை .

குடியிருந்த வீதியில் நடக்கும் போதெல்லாம்
குத்திப் பேசியவர்களின் வார்த்தைகள் கூட
அவ்வளவு ஆழம் இறங்கி இருக்கவில்லை அவர்களுக்கு .

எந்த ஆராய்ச்சியும் செய்திருக்காமல்
பாட்டி சொல்லியிருந்த வேப்பமர அரசமர பிணைப்பு வட்டத்தை
சுற்றிய போதெல்லாம் ஒருநாள் கூட வலித்திருக்கவில்லை அவர்களுக்கு.

திண்ணையை விட்டு விரட்டிய தினம்
கொஞ்சம் வலித்ததாம் அவர்களுக்கு .

இப்போதும் எப்போதாவது வலிக்கிறதாம்
அப்போதெல்லாம் சொல்கிறார்கள்
பழகிவிட்டதென்று.

3 comments:

  1. அண்ணா, நிறைய பேருக்கு இந்த வலி இருக்கு

    ReplyDelete
  2. நல்லா இருக்கு சிவா

    ReplyDelete