Tuesday, November 30, 2010

அம்மா.

அம்மா



முக்கி முட்டி அவள் என்னை புறந்தள்ளியிருக்கையில்
என் எடை என்னவோ மூன்றே கிலோதான்இந்த மூன்றிற்கா முன்னூறு நாட்கள் !!

சொகுசாய் சொக்கி , கூனிக்கிடந்த என்னை ...
கட்டாயமாக முதல் முறையாய்
அவளிடமிருந்து பிரித்துவிட்டிருந்தாள் ...

அவளுக்கு வலித்திருக்கும்
நமக்கும் வலித்திருந்ததால்.

வலிதான் வாழ்க்கை என்றுஅன்றே வழிகாட்டி உணர்த்திவிட்டிருந்தாள் .

தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டபோது
இரண்டாம் முறை அவளிடமிருந்து
என்னை பிரித்துக்கொண்டள் !!

தாய்ப்பால் நின்றபோது
மூன்றாம் முறை பிரித்துவிட்டிருந்தாள்

தவழ்ந்து, தத்தி, தத்தி நடக்கையில்
நானே அவ்வப்போது அவளை பிரிந்துவிட்டிருந்தேன் !!

வலுக்கட்டாயமாக வகுப்பறைக்கு தள்ளியபோது
கட்டாயமாக நான் மறுத்தும் பிரிந்திருந்தது நான்காம் முறை...

பருவம் தொட்டபோது இருவருமே ஒருவரை ஒருவர்
பிரிந்திருக்கவே முற்பட்டிருப்போம் காலத்தின் கட்டாயம்
ஐந்தாம் முறை ...

அவளுக்கே சொந்தமான பாசத்தை
மாற்றாருக்காய் பங்கிட்டுக்கொடுக்கையில்
முதிர்ச்சியுற்றிருந்தாலும் ஆறாம் முறை
அழுதிருப்போம் இருவரும் ...

காலம் அவளிடமிருந்து என்னை பிரிக்க
அவள் கட்டாயப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறாள் ...

வலிதான் வாழ்கை என்று கற்றுக்கொடுத்தவள் ...
வாழ்வதற்கான வழியையும் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறாள் ...

நிரந்தர பிரிவிற்க்காய் காத்திருக்கிறோம்...

Saturday, November 13, 2010

அவ்வப்போது நான் கிறுக்குவது ....

தோற்க்கடிக்கப்பட்டவன்...யாரால்?


தெரியவில்லை....


இருப்பினும் போராட்டத்தை வெற்றிநோக்கி....


இழுத்துச்செல்பவன் அல்ல.... தள்ளிச்செல்பவன்......


தோல்வி தான் வெற்றிபெறும் என்று தெரிந்தே.........


()()()()()()


நான் நல்லவர்களாக அடையாளம் காணப்பட்ட யாவரும்


பிறராலேயே எனக்கு பரிட்சயமானவர்...


()()()()()()


நல்லவங்களா !! யாரு !!

அப்படியெல்லாம் யாருமே கிடையாது .

நீங்க வேற....


நல்லவங்கனு சொல்லிக்கிறோம்...


கெட்டவங்களை


சுட்டிக்காட்டுகிறோம்..


அம்புட்டுதேன்... ( 1, 2 பேரு இருக்கலாம். )


()()()()()()


விவாதம் செய்யப்படும் கருத்து எதுவாயினும் விவாதத்தோடே நின்றுவிடுகிறது ...


நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலும் செயல்படுத்த முடியாமல் போய்விடுகிறது ......


()()()()()()


தினசரி நாள்காட்டி ::


தினம் தினம் பிறந்து


தினம் தினம் இறக்கிறேன் .....


()()()()()()


கால் தடங்கல் தீட்டிய அற்புத ஓவியங்கள் என் வீட்டு தரையில்........


()()()()()()
 
என்னை யாருக்கும் தெரியாது ................


ஆனால் எல்லோருக்கும் தெரியும்..................


()()()()()()


வாழ்கை என்னும் புத்தகம்..


ஒவ்வொருவருக்கும் ..


ஒவ்வொருவகையான பாடத்தை படிக்க.


கட்டாயப்படுத்திவிடுகிறது..


()()()()()()


சிந்தித்து படைத்தல் வேண்டும் ..


பிறர் சிந்தித்து படைத்ததை படைத்தல் ( திருடுதல்) கூடாது.....


()()()()()()


இதை செய்யலாம் , அதை செய்யலாம்,


இப்படி செய்யலாம் , அப்படி செய்யலாம் ,


என அலைக்கழியும் மனதிற்கு .


எதை செய்தாலும் நிறைவதில்லை...


()()()()()()


எனது வளர்ச்சியும் , படைப்புகளும்


பிறரால் அவமானப்படுத்தப்படும்போதும் , கேலி செய்யப்படும்போதும் .


எனது தன்னம்பிக்கையும் , உழைப்பும் புதிதாய் கருவாகிறது..


()()()()()()


காலில் விழ வைப்பவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை...!!


அகவை அதிகமாயிருந்தும் காலில் விழுபவர்களுக்கு சுயமரியாதை இல்லை.!!
 
  ()()()()()()
 
தவறாகிவிடும் ......... வேண்டாம் ............ என முடிவெடுத்த சில காரியங்கள் .


கனப்பொழுதில் கை நழுவி விடுகிறது...
 
  ()()()()()()
 
 பத்து வயதில் பறிகொடுத்த தந்தையின் சேமிப்பு பற்றி


துக்கம் விசாரிக்கிறான் உறவினன் ....


()()()()()()


தயிர்கார அம்மா தன் தலையில் சுமந்து செல்கிறாள் ...


பெப்சி, கோக் , பாண்டா, பாட்டில்களில் தயிர், மோர் நிரப்பியபடி....

()()()()()()


கண் மூடிய சிறிது நேரத்தில் .


மனம் மட்டும் ஊர்சுற்றிக்கொண்டும் ...


ஊர் நியாயம் பேசிக்கொண்டும்..........


()()()()()()


பிறந்து சில திங்களே ஆன !


அந்த பொக்கை வாய் புன்னகைக்கும் !!.


அகவை காரணமாக சுருங்கிய தோலுடன்


காலனின் அழைப்பிற்காக காத்திருக்கும் !


அந்த பொக்கை வாய் புன்னகைக்கும்தான்


எத்தனை.. எத்தனை....அடடா!!! ..


()()()()()()

ஆழ்கடல் நிசப்தம் சூழ்ந்த நடு இருட்டில்


காலக்காட்டியின் நொடி எழுப்புகிறது நெடிய சப்தம் ...


()()()()()()


ஒரு நாள் மட்டும் ஆசை ஆம் :


பிறவிக்குருடனாயிருக்க....


ஒரு நாள் மட்டும் ஆசை !!


பிறவிச்செவிடனாயிருக்க.....


ஒரு நாள் மட்டுமே ஆசை !!


பிறவியில் ஊமையாயிருக்க .......


ஒரே ஒரு நாள் மட்டுமே ஆசை !!


ஒரு நாள் போதும் ......


ஆம் ஒரே ஒரு நாள் மட்டுமே போதும் .....


வேறெப்படி விவரிப்பேன்


நான் கண்ட கனவுகளை !!!..
 
()()()()()()
 
சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட தட்டான் பூச்சி .....


உயிரற்ற உடலாய் "சிறகுகளை விரித்தபடி" மண்ணில்......


()()()()()()


ஊமை அறியாத மொழியாய் ! வார்த்தையாய், !!

குருடன் அறியாத காட்சியாய் ! பிம்பமாய், !!


செவிடன் அறியாத ஓசையாய் ! வசையாய் !!


வலியவன் கூட்டம் வீதியில் ஆட்கொள்ளும் .


வக்கிரமங்களையும் .... அக்கிரமங்களையும் கண்டு !!!!!!!


()()()()()()


தன் வாழ்நாள் முழுவதும் சமூகநலனை பார்த்தவன் ..


வாழ்நாள் இல்லாதபோது எப்படிப்பார்ப்பது ?


என எண்ணிப்பார்த்தான்!!!!!!!!!


கண் தானம் செய்தான் .......


()()()()()()


கண் தானம் கடைசி ஆசை..


உயிர்வீழந்த அடுத்த ''பல'' நிமிடங்கள் காண ஆசை !


எண்ணின் வீழ்ச்சி செய்தி கேட்டு அதிர்ந்த உள்ளங்கள் காண ஆசை !!


எனக்காக கண்ணீர் வடிக்கும் உள்ளங்களுக்காக ....


வீழ்ந்தும் நான் கண்ணீர் வடிக்க ஆசை !!


ஆகவே .. வீழ்ந்த பின் என் கண்ணை தானம் செய்துவிடுங்கள்...

()()()()()()

கனவுகளற்ற நினைவுகளையும் , இரவுகளையும்..



கனவிலும் கடக்க இயலாதவர்களாய் நாம் !!!


()()()()()()
தவறு செய்துவிட்டு உதாரணங்களை உதாரணங்களாக காண்பித்து தற்காலிகமாக மட்டுமே தப்பித்துவிடமுடியும் ......


()()()()()()

தன் இருப்பை காட்டிக்கொள்ளவா அத்துனை செயல்களும் !!! ?

()()()()()()


அடுத்தவர் ஆயுள் ரேகை பார்த்தே தன் ஆயுளை கழிக்கிறான்.....

கைரேகை பார்ப்பவன்.....

()()()()()()

எனக்காக நீ செய்யும் உதவி தன்னலம் சாராமலும் , சுய விளம்பரம் இல்லாமலும் இருந்தால் தான் அதை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியும்......


()()()()()()

முப்பது வருடங்களாக பூவிற்கும் பாட்டி தன் வாழ்க்கையில் கடந்த தூரம் என்னவோ முலம் அளவுதான் ......

()()()()()()

‎(இ) துவுமே (இ) ல்லாத (இ) ராவான (இ) ரவா (இ) ருக்கு (இ) ன்னிக்கு...

()()()()()()
சுடுபவர்களை கண்டால் ''சுடனும்'' போல் தோன்றுகிறது .............

()()()()()()

20/10/2010 கனவு கண்டேன் .......


21/10/2010 அன்று, 20/10/2010 அன்று கண்ட கனவை தொடர்ந்தேன் ........

22/10/2010 அன்று, 23/10/2010 அன்றைய கனவின் முதல் பாகம் தொடர்ந்தேன் ...........

23/10/2010 அன்று, 22/10/2010அன்றைய ''கனவினை கனவில் கண்டேன்'' ............

24/10/2010 அன்று, 25/10/2010 ''காணக்கூடிய கனவினை கனவில் கண்டேன்'' ...........

25/10/2010 அன்று காணவேண்டிய கனவினை,.... 25/10/2010 ''அன்றைய கனவிலேயே கண்டேன்'' .............
()()()()()()

கனவு காணப்போகிறேன்....

நேற்றைய கனவை இன்று தொடரப்போகிறேன் ....

நாளைய கனவின் முதல் பாகம் இன்று தொடர்கிறேன் ...

நேற்றைய கனவினை இன்றைய கனவில்  காணப்போகிறேன் ...

நாளைய கனவினையும் இன்றைய கனவிலேயே காணப்போகிறேன்...

இன்றைய கனவினையும் இன்றைய கனவிலேயே காணப்போகிறேன்.......

()()()()()()

உடலுறுப்புகளில் குறை என்றால் ஊனம்...

மிகை என்றாலுமா ?

()()()()()()

மஞ்சள் பூசிக்கொண்டது கைம்பெண்கள் உடுத்திக்கொள்ளும் உடைகள் மட்டும்............

()()()()()()

சிறுவயதில் கீதமாய் ஒலித்த "பட்டாசு சத்தம்" "இன்று" காதை கிழிக்கையில் ....

பெரியவர்கள் அன்று "திட்டியபோது'' எரி(றி)ச்சலூட்டிய "சத்தம்" இன்று கீதமாய் என்னால் "ஒலிக்கப்பார்கிறது" ....

()()()()()()

வெளிவர மறுக்கும் வார்த்தைகள் மலடாயினும் ..

கருவுற்றிருக்கிறது கருத்துக்கள் நமக்கு............

()()()()()()

"ஜிண்டாக்" போட்டுப்பார்த்தேன் சீக்கிரமே ஆறிவிடுமென்று !!

"ஒமிப்றஜோல்" போட்டுப்பார்த்தேன் ஒரேயடியாய் ஆறிவிடுமென்று !!

பிரச்சினையே வேண்டாமென்று "பேன்டப்பிரஜோல்" போட்டுப்பார்த்தேன் !!

ஆறலையே !! ஆறலையே !! வயிற்றுப்புண் ஆறலையே !!

மாறலையே !! மாறலையே !! கலப்படம் இன்னும் மாறலையே !!.....

ஒரு வேலை மாத்திரையிலும் கலப்படமோ !!!!!

இல்லை காலாவதியோ !!!

()()()()()()

நயவஞ்சகனை நாம் வெற்றிகொள்ள நேர்மையும் உண்மையும் போதுமா?

நயவஞ்சகனை வெற்றிகொள்ள நாம் எடுக்கும் எந்த முயற்சியும், செயலும்,

நடவடிக்கையும். நேர்மையானதே!,உண்மையானதே!!.

()()()()()()

கனவு காணலாமென கண் மூடினேன் ...


பொல பொலவென பொழுது விடிந்தது கனவின் துவக்கத்தில் ....


கனவு களைந்த தருணத்தில் கண் விழித்தேன் ....

இப்பொழுதும் பொல பொலவென பொழுது விடிந்திருந்தது ........

()()()()()()

இரண்டாம் (2G)"தலைமுறை "அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கொள்ளை ...

"பத்து தலைமுறைக்கு" சுகபோக வாழ்விற்கான "ராச" ஒதுக்கீடு ....
ஒதுக்கியவர் சொன்னார் முன் தலைமுறை செய்ததை செய்தேன் என்று ..!!
தலைமுறை தலைமுறையாய் கொள்ளை...
தலைமுறை தாண்டியும் கொள்ளை ...?
எண்ணிப்பார்த்தால் அலை அலையாய் பாய்கிறது கோபம் ...
சிந்தித்தால் சுனாமியாய் சீறுகிறது கோபம் ...
அலை அலையாய் பாய்ந்த கோபம் பதுங்குகிறது ..
சுனாமியாய் சீறிய கோபம் சிணுங்குகிறது ...
நம் தலைமுறை எண்ணி ....
எத்தனை தலைமுறைக்கு தொடரும் இந்த கொள்ளை "கொள்கை"..
அடுத்த தலைமுறைக்கும் .. !!?
படித்த தலைமுறைக்கும் ..!!?
யாருக்கெல்லாம் ஒட்டிக்கொள்ளுமோ !!! இந்த கொள்ளை கொள்கை ....
வருங்கால தலைமுறை விழித்துக்கொண்டால் ....
அவர்கள் "தலைமுறை" சிறக்கும் ........

()()()()()()

என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட உதவி உன்னை ஊமையாகவும் , அடிமையாகவும்
அடையாளம் காட்டுகிறது எனக்கு ..


()()()()()()

கத்தியால் குத்தியவனுக்கு உயிர் தான் முக்கியம் !!


குத்துப்பட்டவனுக்கும் தான் !!


()()()()()()

குழப்பி சரியாய் பேசுவதில் தெளிவாய் பேசுபவன் ......

()()()()()()


காதல் கவிதைகளுக்கு வரிகள் கொடுக்க முயற்ச்சித்து
வெற்றி பெற முடியாதவனாய் !!
வராத காதல் போல் வரிகளும் !!
காதலிக்க "வழிகள்" இருந்திருந்தால் வரிகள் வந்திருக்குமோ ?
காதலித்த "வலி" இருந்திருந்தால் கூட வந்திருக்குமோ ?
காதலித்தவர்கள் "வழி" செல்லாததால் வரவில்லை போலும் !!
காதலித்தவர்கள் "வலி" தெரியாததாலும் வரவில்லை போலும் !!
"இங்கே" வரிகளும் காதலாய் "அவனுக்கு" !!
ஓஹோ !! இது கூட காதல் கவிதை தானோ ?
வராத காதலுக்கு .....................

()()()()()()

நாற்பத்து ஒன்பதாவது சதம் அடித்தபோது ...

ஐம்பதாவது சதத்தை நழுவவிட்டவர் ..!!
நழுவ விட்ட சதத்தில் !!
எத்தனையாவது நழுவ விட்ட சதத்தை பூர்த்தி செய்யும்போது
ஐம்பதாவது சதத்தை பூர்த்தி செய்வார்...... ?

()()()()()()

இணையத்தில் இலவசமாய் கிடைத்த விண்ணப்பத்திற்கு ..
முகமறியாமல் அறிமுகமாகவிருக்கும் நட்பிற்க்குண்டான..
ஐந்தாயிரம் பக்கங்களைக்கொண்ட முகப்புத்தகமும் இலவசமாய் கிடைத்தது !!
நான் புரட்டிய "நானூற்று நாற்பத்து நான்கு" பக்கங்களில் ..
கிழித்தெறியப்பட்ட பக்கங்கள் "நான்கு" மட்டுமே !!
எஞ்சியிருக்கும் முகவரியற்ற பக்கங்களையும் படிக்கவிருக்கிறேன் !!
இனி ஒரு பக்கத்தைக்கூட கிழிக்க விரும்பாமல் ....
எந்த பக்கங்களும் என்பக்கத்தை கிழித்துவிடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும் ..
நானூற்று நாற்பத்து நான்கு பக்கங்களிலும் நான் படித்து கற்றது ஏராளம் !!
கிழித்தெறியப்பட்ட நான்கு பக்கங்களிலும் நான் கற்றது ஏராளம் !!
இதை என் பக்கம் உணர்த்துகிறது .....

()()()()()()

இரவும் இல்லை ...


பகலும் இல்லை !

இருட்டவிருக்கும்

இரவுமில்லை !

விடிதலுக்குமுன்னுள்ள

இரவுமில்லை !

இருட்டவிருக்கும்

இரவிற்க்குமுன்னுள்ள

பகலுமில்லை !

விடிதலுக்குபின்னுள்ள

பகலுமில்லை !
 
()()()()()()

 எட்டுக்கால் பூச்சிகள்.....


எந்த மூலையில் வீ(கூ)டுகட்டினாலும் துரத்துகிறார்கள் ..

எட்டுக்கால்கள் என்பதாலேயோ என்னவோ !!!!

()()()()()()

மனித ஆர்கனின் முதல் குற்றவாளியான மூளையே ..


உன்னை திருத்திக்கொள்ளவும் தண்டித்துக்கொள்ளவும் உன்னால் மட்டுமே முடியும்........

()()()()()()

கழுவிவிட்டது மழை !! வாகனங்களையும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் முதலாளிகளின் கல்லாவையும் ......


()()()()()()
 
நாடு இருட்டின் இரண்டாம் பாகமும் ! கடலின் கால் பாகமும் !


தஞ்சையை சுற்றி இரண்டாம் நாளாக இன்றும் !!!
 
()()()()()()

நிஜமும் , நியாமும் இல்லாத


நித்திரை மட்டும்

நிரந்தர எல்லையை

நிர்ணயிக்காமல் !!

நித்தம் பயணிக்கிறது .....

()()()()()()

கிளி ஜோசியம் பார்ப்பவனது கிளி தேர்வு செய்தது ..........


தன் படம் போட்ட அட்டையை !!

()()()()()()

நிஜமும் நியாமும் இல்லாத


கனவு மட்டும் ...

நிரந்தர எல்லையை

நிர்ணயிக்காமல் !!

நித்தம் பயணிக்கிறது !!

கனவில் மட்டும் .........
 
()()()()()()

எதைப்பார்த்தாலும் சரி .......


எப்படிப்பார்த்தாலும் சரி .......

எதையோ பார்ப்பது போல்பார்த்தாலும் சரி ...........

எப்படியோ ...............

என்னைப்பார்,,,,,,,,,,,

()()()()()()

உன்னை உன்னாகவே இந்த உலகத்திற்கு அடையாளப்படுத்திக்கொள்ள
எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று என்னாதே, செய்யவேண்டியதை மட்டும் செய்யத்தவறாமல் இருந்துவிடாதே .........

()()()()()()



முகத்துடன் சேர்த்து கர்வத்தையும் காட்டுகிறது கண்ணாடி .........

()()()()()()


வான் வசப்பட்டிருந்த நீர் அவ்வப்போது விடுதலையாகும்போது


விடுதலை தாகம் தீர்ந்த மகிழ்ச்சியில் விரைந்துகொண்டே இருக்கிறது

தடாகம் நிரப்பவும், தாகம் தீர்க்கவும் ,

ஆனந்த கூத்தாட்டத்துடன் மண்ணை முட்ட ......

()()()()()()


சரியாக எடை ஏற்றப்பட்ட வெற்றுத்தராசு நான்...

()()()()()()

பெளர்ணமி பொழுதுகளையும் அமாவாசையாக கழித்துக்கொண்டிருக்கிறோம் ......

()()()()()()

முழைத்த மொட்டு பூத்த தருணத்தில் தானம் செய்துவிடுகிறது தேனை !!
 
()()()()()()

என் கனவு தான் எனக்கே தெரியாத என்னுடைய ரகசியம் என்று !!!


()()()()()()
 
கனவாய்ப்போன கனவை காணப்போகிறேன் ............


()()()()()()

ஆழ்ந்து சிந்தித்த ஏதோ ஒன்று தான் நேற்றைய கனவாக எனக்கு வந்தது முற்றிலும் அதே சிந்தனை எனக்கு கனவாகவில்லை .  கனவில் கூட என்னுடைய அகராதி மூளை சிந்தையை வேறு பக்கம் இழுத்து சென்றுவிட்டது போலும் ..

()()()()()()


பிறரை ஒதுக்கும் குணத்தை மனிதன் மட்டுமே ஆட்கொண்டிருக்கிறான் .

எந்த காரணியாக இருந்தாலும் ஒதுக்குதல் தான் நாம் பிறருக்கு வழங்கும் அதிக பட்ச தண்டனை .....

பிறரை தண்டிக்கும் அதிகாரம் நமதில்லை ...

ஒதுக்குதலைவிட ஒதுங்கி கொள்ளுதல் மேன்மை

ஒதுங்கிக்கொள்ளுதலும் ஒதுக்குதலின் ஒரு அங்கம் தான் .....

முதலில் இதை சொன்ன என்னால் அவ்வாறு இருக்கமுடியுமா என்றால் முடியாதுதான்

இதற்க்கு நான் காரணமல்ல.........

என்னை வளர்த்த, நான் பார்த்து வளர்ந்த சமூகம் தான் காரணம் ............

(யாரங்கே ? முனுமுனுப்பது தன்னுடைய குறையை சமூகத்தின் மீது நான் சுமத்துவதாக ?)

இது தான் உண்மை .......)

()()()()()()

இன்றைய எனது கனவில் மற்றவரது கனவை களவாடப்போகிறேன்........

()()()()()()

கைம்மாறு கருதியே பொழிந்திருக்கிறது வானம் .........

()()()()()()

ஓவ்வொரு பதிலும் பல கேள்விகளை உள்ளடக்கியதே !!!

()()()()()()

பிச்சை காரனுக்கு பிச்சை போட்ட காசை

பிச்சைக்காரன் பிச்சை காசாக நினைத்து
பிச்சை போட்டவனுக்கு திருப்பி கொடுத்த பிச்சை காசை
பிச்சைகாரத்தனமா திருப்பி வாங்கி கொண்டானென்றால்
யார் பிச்சைக்காரன் !!!!!!!
(பிச்சைக்காரன் என்ற வார்த்தை உபயோகத்திற்கு மன்னிக்கவும்)

()()()()()()

நீண்ட நாட்களாக நான் என்னவே என்னாதிருந்த என் பழைய பனி குறித்த கனவு நேற்றைய கனவில் ஒரு தாக்கம் .....

()()()()()()
இருட்டும் கனவும் தான் எனது சிந்தனையும் எழுத்தும் .......

()()()()()()

இனக்கவர்ச்சிக்கு பரிணாம வளர்ச்சி இட்ட பெயர் காதல் !!!


காதலின் புனிதத்தை இனக்கவர்ச்சியில் இருந்து பிரித்துக்காட்டியதும் பரிணாமவளர்ச்சி ...........

()()()()()()
 
எல்லையில்லா இலக்கு .....


நிர்ணயிக்காத எல்லை நோக்கிய பயணம் .......

()()()()()()
 
கண்ணை மூடினாலும் காணமுடிகிறது காட்சியை கனவாக !!!!!!!!!!

()()()()()()

நானே அறிந்திடாத என்னுடைய ரகசியம் தான் எனது கனவு !!

()()()()()()

களைந்த பழைய கனவுகளை கழைய போகிறேன் இன்றைய கனவில் .....

()()()()()()

குட்டி  தூக்கத்தை கூட களவாண்டுவிடுகிறது கனவு ...........

()()()()()()

கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது காலண்டர் .......

()()()()()()

இதுவரையில் நான் கண்ட கனவு எப்படி நிறைவேற வில்லையோ.. அப்படியே இன்று காணவிருக்கும் கனவும் நிறைவேற வேண்டாம் என்ற கனவுடன் .........

()()()()()()

இன்று நான் காணப்போவது வெறும் கனவுதான் ,,,,,,,,,,

()()()()()()

ஆழ்ந்த உறக்கத்தின் விழிப்பிற்கு பின்னால் வந்த கனவு எப்பொழுது வருகிறது எப்பொழுது கலைகிறது என்றே தெரியவில்லை !!!

()()()()()()

ஆழ்ந்த உறக்கத்தை கலைத்த கனவு தன்னையும் கலைத்துக்கொண்டது !!!

()()()()()()

என் நியாயத்தின் நியாத்தை எனது நேற்றைய கனவிடம் முறையிட்டேன் !!!

()()()()()()

நான் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி .......
என்னை நீ எப்படி பார்க்கிறாயோ...
அப்படியே தான் நானும் உன்னை பார்ப்பேன் .
என்னை பத்திரமாக வைத்துக்கொள்வது
உனது திறமை, உனது கடமை !!
உடைத்து விட்டால் மறுபடியும் ஒட்டமாட்டேன் ..........
அப்படி ஓட்டிப்பார்க்க நீ முயற்ச்சித்தாலும்
என்னுடைய பழைய முகத்தை நீயும் .
உன்னுடைய பழையமுகத்தை நானும்
பார்க்கவே முடியாது ............


()()()()()()
எனது நேற்றைய கனவிற்கு விடுமுறை போலும் !!! 


 

Monday, August 30, 2010

விலங்குகள் உணர்த்துபவை...

விலங்குகள் உணர்த்துபவை...


எம் இனத்தவர் ஒருவரிலிருந்து பரிணாமவளர்ச்சி அடைந்தவர்களே!   வணக்கம்.....

என்னடா வணக்கம் எல்லாம் சொல்றோமேனு பார்த்திங்களா? எல்லாம் நீங்கள் கற்றுக்கொடுத்தது தான் ( circusla ) ...

எங்களைப்பற்றி நீங்கள் பேசிக்கொள்வது எல்லாம் எங்களுக்கு தெரியும் . எப்படின்னு கேட்கின்றீர்களா? அதுதான் கொஞ்சம் கொஞ்சமாக

நகர்ந்து உங்களுடைய வாழ்விடம் எங்கள் வாழ்விடம் நோக்கி வந்துவிட்டதே..

நாங்கள் வசிக்கும்,, நடமாடும் வனப்பகுதிகளில் நீங்கள் குடியேறிவிட்டு வனப்பகுதிகளில் விலங்குகள் நடமாட்டம் என சொல்லிக்கொள்கின்றீர்கள்.

யாருக்கு 5 அறிவு ? யாருக்கு 6 அறிவு ? என்று தெரியவில்லை..

எங்களுக்கு பேசவும் , சிரிக்கவும் தெரியாது என்பதைத்தவிர உங்களை விட நாங்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல .

( அன்பு , பாசம் , நேசம்)

ஆனால் நீங்கள் தான் உங்கள் பசிக்காக எங்களை பிச்சை எடுக்க வைத்தீர்கள் ..

வித்தைக்கூடத்தில் அடைத்து வைத்து வேடிக்கை காட்டச்சொல்லி கைகொட்டி சிரித்தீர்கள் ...

திரைப்படங்களில் வலுக்கட்டயாமாக நடிக்க வைத்து சிரித்து ரசித்தீர்கள் ...

எங்கள் இருப்பிடத்திலேயே எங்களை வேலிகட்டி அடைத்து வைத்து எங்களை வேடிக்கை பார்த்தீர்கள் ....

வாக்குரிமை உங்களுக்கு மட்டும் என்பதாலேயோ என்னவோ பட்ஜெட்டில் எங்களுக்கான வாழ்வாதார உரிமைகள் கூட இல்லை..

நல்ல வேலை உங்களில் சிலர் எங்களின் சிரமங்களை உணர்ந்து ப்ளூ கிராஸ் போன்ற அமைப்புகளை தொடங்கி எங்களின் சிரமங்களை குறைத்தனர்....

குரல் இல்லாத எங்களுக்காக குரல் கொடுத்து எங்களை துன்பத்திலிருந்து பாதுகாத்த ஒரு புண்ணியவதிக்கு எங்களின் நன்றிகள்....

புண்ணியவதி மட்டும் எங்களுக்காக குரல் கொடுக்காமல் இருந்திருந்தால் எங்களுடைய உண்மைத்தன்மையை இழந்திருப்போம் .. உங்களைப்போலவே..

அய்யா /அம்மா , (என்னடா அய்யா/அம்மா என்கின்றோம்னு  பார்கிறீங்களா அது ஒன்றும் இல்லை ஆணுக்கு பெண் சரிநிகர் தானே ?) நாங்களாக யாரையும் சீண்டுவதில்லை எங்களை தற்காத்து கொள்ளவே சீண்டுவோம்...

எங்களிலும் சில முரடர்கள் இருக்கின்றனர் பிறர் சீண்டாவிடினும் சீண்டுபவர்கள் உணவிற்காக மட்டுமே...

6 அறிவு படைத்த உங்களுக்கு தெரியாதா  என்ன?

அவர்கள் விதி விலக்கானவர்கள் நீங்கள் சொல்வது போல...

எங்கள் வீடான மரங்களையும் , வனங்களையும் அழித்து நீங்கள் வீடு கட்ட பயன்படுத்திக்கொள்கின்றீர்கள்.

இந்த இயற்கை எல்லோருக்குமானதுதானே?

மரங்களும் , காடுகளும் இல்லேனா மழையும் வராது அப்புறம் தண்ணிக்கே சிரமம் தான் எங்களுக்கு மட்டும் உங்களுக்கல்ல...

நீங்க கடல் நீரை குடிநீராக்கிகொள்வீர்கள் உங்களுக்கு சிரமம் இல்லை..

ம்ம்ம் ...உங்கள்ட்ட ஒன்னு கேட்கணும்,.. எங்கள் வீடான மரங்களை உங்கள் வீட்டுக்குள்ளேயே வளர்த்துக்கிட்டு இருக்கிங்கலாமே ?( bonsai ) அப்போ உங்க வீட்டுக்குள்ள வளர்க்கிற மரங்களில் நாங்கள்  குடி ஏறிக்கொள்ளாலாமா?

ஏன் காட்டை அழிப்பானேன் ? அப்புறம் காட்டை வீட்டுக்குள் வளர்ப்பானேன்...?
அய்யா/அம்மா.(சமத்துவம்) நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்னு தான் நீங்க எங்க இடத்திற்கு வரவேண்டாம் , வந்தாலும் துன்புறுத்த வேண்டாம் . நாங்க உங்க இடத்திற்கு வரவேயில்லை ....

Tuesday, July 6, 2010

திருப்பாவை - ஆண்டாள்

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்

மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!



இது திருப்பாவையின் முத்தாய்ப்பான பாசுரம். இதற்கு அடுத்த பாசுரம் சாற்றுமுறையாக, வாழ்த்துரையாக ஆண்டாள் பாடியது. இந்த பாசுரம் வரை தன்னை ஆய்ப்பாடியைச் சேர்ந்த பெண்பிள்ளையாக எண்ணிக்கொண்டு ஆண்டாள் பாடினாள். அடுத்த பாசுரத்தில் பெரியாழ்வாரின் பெண்ணாக, திருப்பாவை பாசுரங்களை இயற்றிய கவியாக பலஸ்ருதி சொல்லி முடிக்கிறாள். இந்த பாசுரம் பகவத் தாஸ்யம் சொல்லுகிற பாசுரம். பதினைந்தாம் பாசுரமான எல்லே இளங்கிளியே! பாசுரத்தில் பாகவத தாஸ்யம் சொல்லப்பட்டது. இந்த இரண்டு பாசுரங்களையுமே பூர்வாசார்யர்கள் ஆச்சர்யப்பட்டு திருப்பாவையாவது இப்பாட்டிறே! என்று புகழ்ந்தார்கள்.



ரொம்பவும் தத்துவமாகவும், கவித்துவமாகவும் சொல்லி வந்த ஆண்டாள், பகவானை நேரில் பார்த்த பரவசத்தை கடைசி ஐந்து பாசுரங்களில் வெளிப்படுத்துகிறாள். அதிலும் இந்த பாசுரம் முடிந்த முடிவாக தான் விரும்பி வந்தது என்ன என்று உடைத்து சொல்லி அவனுடைய தாஸ்யத்தை தனது பரம புருஷார்த்தமாக கேட்டுக்கொண்ட பாசுரம். அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே! என்று அபராத க்ஷமாபனம் செய்து தனது முன்வினைகளை சரணாகதியின் மூலம் அழித்தது இதற்கு முந்தைய பாசுரத்தில். அந்த பாசுரத்தில் முக்கியமான வார்த்தைகள் அவை.



அதே போல் இந்த பாசுரத்திலும் இற்றைப் பறைகொள்வான் அன்று! காண், கோவிந்தா, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம், உனக்கே நாமாட்செய்வோம்! என்று நாங்கள் வெறும் பறை எனும் வாத்தியத்தை பெற்றுப்போக வரவில்லை. அது ஒரு வியாஜமே! நாங்கள் வந்தது உன்னிடம் அடிமையாக இருக்கும் பெரும் பேற்றை பரம புருஷார்த்தமாக பெற்றுப்போகவே! இதை பூர்வாசார்யர்கள், ‘ஸ்ரீ பரதாழ்வானைப் போலே விஸ்லேஷித்திருக்கையன்றிக்கே, இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேணும்’ என்று தெரிவிக்கிறார்கள். பரதனைப்போலே உன்னை பிரிந்த போது, அன்னம் தண்ணீர் இல்லாது உன் பாதுகையையே நமஸ்கரித்து அதனடிவாரத்திலேயே இருந்து பக்தி பண்ணிக்கொண்டிருந்தபடி. உன்னோடு இருக்கும்போது, இளைய பெருமாளான லக்ஷ்மணனைப்போல் எல்லாவிதமான தாஸ்யங்களையும் குறைவற்று உனது திருப்திக்காகவே செய்தபடி இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.



எற்றைக்கும் என்பது எக்காலத்திலும் என்று ஸ்ரீவைகுண்டத்தில் அருகில் இருந்து செய்யும் தொண்டு. ஏழேழ் பிறவி என்றால், பகவான் பூமிக்கு வந்தாலும் அவனுடனே வந்து இருந்து அவன் கூடவே தொண்டு செய்தல். ஏழேழ் பிறவி என்பது எண்ணிக்கை என்று கொள்ளாமல் எத்தனை முறையானாலும் என்றே கொள்ள வேண்டும். வேறொரு விதமாகப் பார்த்தால், இனி ஒரு வேளை பிறப்பெடுக்க நேர்ந்தால், அப்போதும் உனக்கு தாஸனாகவே இருக்க வேண்டும் என்று கேட்பதாகும். மற்றை நம் காமங்களை மாற்றி உனக்கே ஆட்செய்ய அருளுவாய் என்று கர்ம வாஸனை எங்களை வேறு விஷயங்களில் இழுத்து அமிழ்த்தி விடாமல் அதிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்கள்.



இப்படி கேட்பதற்கு இந்த பாசுரத்தின் முன் பாதியில் ஒரு உறுதியை வெளிப்படுத்துகிறாள். சிற்றஞ் சிறுகாலே வந்து… என்று இளம் விடியற்காலையில் வந்து எனும்போது, அவனை தேடி அடி எடுத்து வைத்து வந்ததற்கே அவன் ரக்ஷிக்க சங்கல்பித்து விடுவனாம். பின் ‘உன்னை சேவித்து’ என்று அவனை விழுந்து வணங்கிவிட்டால், அதற்கு என்ன தரக்கூடும் என்று திகைத்துப் போவானாம் பகவான். ‘அதுக்கு மேலே ஓரஞ்சலியையும் உண்டறுக்கமாட்டாத உன்னைச் சேவித்து’ என்று பூர்வாசாரயர்கள் சொல்கிறார்கள். ‘உன் பொற்றாமரை அடியே’ என்று ஏகாரமாக இழுத்து சொல்வதால் வேறொருவரையும் நாடாமல் உன் திருவடிகளையே நாடி வந்து சேவித்து உன்னை போற்றி ஸ்தோத்திரம் செய்து, கவன ஈர்ப்பாக ‘பொருள் கேளாய்!’ என்று நாங்கள் வந்த காரியத்தை கேள் என்கிறாள்.



பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து என்று சொல்லும் போது, ‘ரக்ஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தாலல்லாது தாங்களுண்ணாத குலம்’ என்று ஆயர் குலத்துக்கு உள்ள லக்ஷணத்தைப்போல் தம்மிடம் ரக்ஷணத்துக்கு வந்த ஜீவனை ரக்ஷிக்காமல் விடாத நீ, குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது! என்று உறுதியாய் சொல்கிறாள். நீ எங்களை கொள்ளாமல் விடுவது உன் ஸ்வரூபத்துக்கு விரோதமாகும். அதனால் நீ நிச்சயம் எங்களை ரக்ஷிப்பாய் என்று மஹா விஸ்வாசத்தை வெளிப்படுத்துகிறாள்.



நாங்கள் உன்னிடம் சூடகம், பாடகம் என்று என்னென்ன கேட்டாலும் கொடுத்தாய். நாங்கள் அதை மட்டுமே பெற்றுப்போக வரவில்லை. அவைகளெல்லாம் இப்போது நாங்கள் கேட்கப்போவதான மோக்ஷத்துக்கு (நீ உகக்கூடிய) சாதனங்கள். எங்களுக்கு உன்னிடம் ஸ்மரணை ஏற்படுத்துவதும், உன்னை வந்தடைவதற்கு ஏற்ற சாதனத்தைக் கொடுப்பதும், செப்பமுடைய உன் திறலால் எங்கள் சாதகத்திற்கு விரோதமாக இருப்பதை நீக்குவதும், மற்றை நம் காமங்கள் மாற்றுவதும், எங்களோடே அந்தர்யாமியாய் இருந்து தேற்றுவதும் உன் அருளாலே கிடைக்க வேண்டும். சாத்யோபாயங்களும், சித்தோபாயங்களும் எல்லாம் உன்னாலேயே கிடைக்க வேண்டும், நீயே சரணம் என்று சரணாகதி செய்கிறாள் ஆண்டாள்.


வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்


திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்

பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே

இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!



வங்க கடல் எனும் மரக்கலங்கள் மிதக்கும் பாற்கடலைக் கடைந்து மா என்கிற லக்ஷ்மியைப் பெற்ற மாதவனை, ஆஸ்ரிதர்களுக்கு ஊறு செய்த அசுரர்களை அழித்த கேசவனை, ஆய்ப்பாடியில் திங்கள் திருமுகத்து சேயிழையார்களான பெண்பிள்ளைகள், அவன் இருக்குமிடத்துக்கே சென்று இரைஞ்சி, அங்கே பறை கொண்டார்கள். பறை எனும் பரம புருஷார்த்தத்தை அவனிடமிருந்தே பெற்றார்கள். இந்த ஆற்றை – பெருஞ்செயலை பிற்காலத்தில் ஆண்டாள் அனுகரித்து, பக்தியால் உணர்ந்து பாடினாள்.



அணி புதுவை – இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற ஸ்ரீவில்லி புத்தூரில், பைங்கமல தண் தெரியல் என்று தண்மையான குளிர்ந்த மாலைகளை அணிந்தவராகவும், பட்டர்பிரான் என்று பண்டிதர்களுக்கு தலைவராகவும் பெரியாழ்வார் விளங்குகிறார். அப்பேர்பட்டவருடைய திருமகளான கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை – தன் இரண்டு தோள்கள் நான்கு தோள்களாகும் படியாக, இரண்டு கை போதாது இந்த ஆஸ்ரிதரை அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பனாம். அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று இன்புறுவர் என்று மங்களா சாசனம் செய்கிறாள்.



‘நற்கன்னுக்கிரங்குந்தேனு தோற்கன்னுக்குமிரங்குமாபோலே…’ என்று வியாக்கியானத்தில் சொன்னபடி, நாம் ஆய்ப்பாடியை சேர்ந்தவர்கள் இல்லாவிட்டாலும், ஆழ்வார் ஆசார்யர்கள் ஆண்டாளைப்போல் இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், நல்ல கன்றைப்போலே, தோல் கன்றுக்குட்டிக்கும் பசு இரங்கி பால் சுரப்பது போல், பகவான் அருளுவன் என்று சொன்னார்கள்.



இந்த பாசுரத்துடன் திருப்பாவை நிறைவுக்கு வருகிறது. நம்மால் முடியுமா என்று சந்தேகமெல்லாம் பட்டுக்கொள்ளாமல், ஆசைப்பட்டு திருப்பாவைக்கு வியாக்கியானம் எழுத ஆரம்பித்தேன். இதில் சித்தாந்த விரோதமாகவோ, ஆசார்யர் உபதேச விரோதமாகவோ, பகவத் அபசாரமோ, பாகவத அபசாரமோ, இன்னும் அறியாத வகையில் எதாவது குறைகள் இந்த உரையில் நலிந்தும் வலிந்தும் ஏற்பட்டிருக்குமேயானால், பெரியோர்கள் க்ஷமிக்க வேண்டும் என்று உளமாற சேவித்து கேட்டுக்கொள்கிறேன்.



இந்த மார்கழியில், திருப்பாவையை சொன்னவர்கள், கேட்டவர்கள், படித்தவர்கள், எழுதியவர்கள் என்று எல்லோருக்கும் கோதையின் அருள், அவள் உகந்த செல்வத்திருமால் கண்ணனது அருள் தட்டின்றி கிடைக்கட்டும். வாழ்வில் எல்லா மங்களங்களும் அடைந்து எங்கும் அடியார்கள் ஆசார்யர்கள் தொடர்பும், சத்வ குணமும், ஐஸ்வர்யங்களும், பகவத் கிருபையும் பெற்று இன்புற வேண்டும் என்று வாழ்த்தி இந்த திருப்பாவை உரையை முடிக்கிறேன்.



                                                 இதை எழுதி விளக்கியவருக்கு நன்றி
                                                            

Saturday, July 3, 2010

நான் செய்தவைகள் நீங்களும் செய்யலாம்

பெறுதல்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ,
தமிழ்நாடு .



அய்யா ,
பொருள்: மக்கும் தன்மையற்ற மற்றும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்த தகுதியற்ற பாலிதீன் பை , மற்றும் பாலிதீன் பொருட்களை தடை செய்ய பணிவுடன் கோருதல் .



மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா அவர்கள்,

இந்த இயற்கையின் மீதும், பூமியின் மீதும் அக்கறை கொண்ட அடிப்படையில் மனிதன் என்ற முறையிலும் , இந்தியன் என்ற முறையிலும் கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் தமிழகத்தில் பிறந்ததால் தமிழன் என்ற முறையிலும், இந்த மண் வளம் பாதிப்பதை கண்டு வேதனையுறும் சமூக ஆர்வலர்களில் நானும் ஒருவன் மலை பிரதேசத்தில் பாலித்தின் பை மற்றும் பாலித்தின் பொருட்களுக்கு தடை விதித்ததை போன்று தமிழகம் முழுவதிலும் பாலித்தின் பொருட்களுக்கு தடை விதித்து . மறு சுழற்சி முறையில் பயன்படுத்தத்தக்க , மக்கும் தன்மையுள்ள மாற்று தொழில் நுட்ப பொருள்கள் தயாரிக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து உற்பத்தி செய்து பயன்பாட்டிற்கு விட மண் வளம் பாதுகாக்கபடுவதோடு இந்தியாவிலேயே பாலிதின் தடை செய்யப்பட்ட முதல் மாநிலமாக தமிழகம் விளங்க அவசர கால நடவடிக்கையாக தாங்கள் செய்து நம் மண்வளம் காக்க உதவிடுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன் .

                                                          இப்படிக்கு
                                                         தி. சிவகுமார் .

Sunday, June 27, 2010

தேசிய கீதம் ,, தமிழ்த்தாய் வாழ்த்து

தேசிய கீதம்:::


இயற்றி இசையமைத்தவர்       இரவீந்திரநாத்  தாகூர்
பிறந்த தேதி                                 7 . 5 . 1861
பிறந்த இடம்                                கல்கத்தா
இறப்பு                                            7 . 10  . 1941
தொழில்                                        கவிஞர்,நாடகாசிரியர்,
                                                       இசையமைப்பாளர்,
                                                       ஓவியம்.
முக்கிய விருதுகள்                     இலக்கியத்திற்கான
                                                        நோபல் பரிசு [ 1913 ],
நூல்                                              கீதாஞ்சலி
பாடிமுடிப்பதற்க்கு                      52 வினாடிகள்
சேர்க்கப்பட்டது                            1950 .



ஜன கண மன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆசிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜய ஹே
பாரத பக்ய விதாதா
ஜய ஹே ஜய ஹே ஜய ஹே
ஜய ஜய ஜய ஜய ஹே


- மகாகவி இரவீந்திரநாத தாகூர்
    *****

தமிழாக்கம்
***************

மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.



  


தமிழ்த்தாய் வாழ்த்து::


நீராருங் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்

தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!

அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற,

எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும்

தமிழணங்கே!

தமிழணங்கே!

நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து

வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே.



                           "மனோன்மணீயம்" பெ. சுந்தரம் பிள்ளை