Sunday, June 27, 2010

தேசிய கீதம் ,, தமிழ்த்தாய் வாழ்த்து

தேசிய கீதம்:::


இயற்றி இசையமைத்தவர்       இரவீந்திரநாத்  தாகூர்
பிறந்த தேதி                                 7 . 5 . 1861
பிறந்த இடம்                                கல்கத்தா
இறப்பு                                            7 . 10  . 1941
தொழில்                                        கவிஞர்,நாடகாசிரியர்,
                                                       இசையமைப்பாளர்,
                                                       ஓவியம்.
முக்கிய விருதுகள்                     இலக்கியத்திற்கான
                                                        நோபல் பரிசு [ 1913 ],
நூல்                                              கீதாஞ்சலி
பாடிமுடிப்பதற்க்கு                      52 வினாடிகள்
சேர்க்கப்பட்டது                            1950 .



ஜன கண மன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆசிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜய ஹே
பாரத பக்ய விதாதா
ஜய ஹே ஜய ஹே ஜய ஹே
ஜய ஜய ஜய ஜய ஹே


- மகாகவி இரவீந்திரநாத தாகூர்
    *****

தமிழாக்கம்
***************

மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.



  


தமிழ்த்தாய் வாழ்த்து::


நீராருங் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்

தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!

அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற,

எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும்

தமிழணங்கே!

தமிழணங்கே!

நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து

வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே.



                           "மனோன்மணீயம்" பெ. சுந்தரம் பிள்ளை


No comments:

Post a Comment