Sunday, June 27, 2010

தேசிய கீதம் ,, தமிழ்த்தாய் வாழ்த்து

தேசிய கீதம்:::


இயற்றி இசையமைத்தவர்       இரவீந்திரநாத்  தாகூர்
பிறந்த தேதி                                 7 . 5 . 1861
பிறந்த இடம்                                கல்கத்தா
இறப்பு                                            7 . 10  . 1941
தொழில்                                        கவிஞர்,நாடகாசிரியர்,
                                                       இசையமைப்பாளர்,
                                                       ஓவியம்.
முக்கிய விருதுகள்                     இலக்கியத்திற்கான
                                                        நோபல் பரிசு [ 1913 ],
நூல்                                              கீதாஞ்சலி
பாடிமுடிப்பதற்க்கு                      52 வினாடிகள்
சேர்க்கப்பட்டது                            1950 .



ஜன கண மன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆசிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜய ஹே
பாரத பக்ய விதாதா
ஜய ஹே ஜய ஹே ஜய ஹே
ஜய ஜய ஜய ஜய ஹே


- மகாகவி இரவீந்திரநாத தாகூர்
    *****

தமிழாக்கம்
***************

மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.



  


தமிழ்த்தாய் வாழ்த்து::


நீராருங் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்

தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!

அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற,

எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும்

தமிழணங்கே!

தமிழணங்கே!

நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து

வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே.



                           "மனோன்மணீயம்" பெ. சுந்தரம் பிள்ளை


Tuesday, June 15, 2010

கண்ணதாசன் கடவுளிடம் கேட்டதாகச்சொன்னது::::::

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்

பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்

வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்!

'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்

ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி

'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
 
 
                                                                                                              கண்ணதாசன்
 

Sunday, June 6, 2010

மனிதனைப்பற்றி

உலகின் முதல் குற்றவாளி மனிதனே ! 

     மனிதனுக்கு மனிதனே எதிரி !  ஆதி காலம் முதலாகவே தனது சுயதேவைக்காக மட்டுமே மனிதனுக்கு மனிதன் எதிரியாக வாழ பழக்கப்படுதிக்கொண்டிருந்திருகிறான்.

     மரணத்தை எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் பக்குவமும் ஆறறிவாளனுக்கே!! (மனிதனுக்கே).

     தனிமனித கோபமோ, போராட்டமோ, சமுதாயத்தை சீர்திருத்திவிட  முடியாது,   தனிமனித கட்டுப்பாடு,   தனிமனித  ஒழுக்கம் , மற்றும் அரசின் நெருக்கடியான சட்டத்தின் மூலமே சமூக அவலங்கள் சீர்திருத்தப்படும் .

     எந்த ஒரு மனிதனும் தனக்குன்னு ஒரு சுயநலம் இல்லாமல் எந்த செயலையும் செய்றதில்லை பிச்சை போடுவது முதற்கொண்டு.  உதரணமாக பிச்சை போட்டால் வாங்கிகொண்டவர்கள் வாழ்த்துவார்கள் என்றும் இதனால் தனக்கும் , தன் சந்ததிக்கும் , தான் சார்ந்து இருப்பவர்களுக்கும் புண்ணியம் கிடைக்கும்னு நம்புறான் இது நடைமுறையில் உண்மை.

     நம் முன்னோர்களெல்லாம் நாம் நெறியுடன் வளரவேண்டும் என்பதற்காக , நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கின்றதென்றும்  அதன் பெயர் கடவுள் என்றும் கூறி வளர்த்தார்கள் இதனால் இறை பக்தி வளர்ந்தது .  சாமி சிலையை வடிக்கிறவன் மனிதன் , எந்த சாமியோட உருவம் எப்படி இருக்கணும்னு நிர்ணயம் செய்றதும் மனிதன் , அவ்வாறு வடித்த சிலையை கோவில்களில் வைத்து பூஜை செய்கிறான் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பென்று விளம்பரபடுத்துகிறான்  , சிறப்பு வழிபாடு , சிறப்பு பூஜை என்றும் அவனே விளம்பரப்படுதுகிறான் .  சாமி சிலையை மூலதனமாக வைத்து பணமும் , புகழும் சம்பாதிக்க நினைக்கிறான். பால், தயிர் , பழம், பஞ்சாமிர்தாம் , இளநீர் , தேன் , மஞ்சள் , சந்தனம் ,என்று சாமி சிலையில் ஊற்றி மந்திரம் தெரிந்த ஆசாமி இந்த பணியை செய்றான் , கோவிலுக்கு வெளியில் பசி, பட்னியோட நிறையபேர் பிச்சை எடுத்துட்டுருப்பாங்க ஆனால் உள்ளே பார்த்தல் உயிரற்ற கல் சிலைக்கு மேற்குறிப்பிட்ட உணவுப்பொருளால் அபிஷேகம் நடக்கும் உணவுப்பொருளை ஏன் இப்படி  வீனடிக்குறாங்கன்னே புரியல ?,சாதாரண தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினால் போதும் சுத்தமாக இருப்பதற்காக !.

     இன்றைக்கு இறை பக்தி அதீதமாக இருப்பவர்களில் ஒரு சிலரே உண்மையானவர்கள்.  நிறைய தவறு செய்ய வேண்டிய நிர்பந்தம் மனிதனுக்கு எற்பட்டுபோச்சு, அதனால சாமி கும்பிடாதவனல்லாம் நல்லவனும் கிடையாது.  தானும், தனது சந்ததியும் வளமாக வாழ வேண்டும் என்பதற்காக சக மனிதனை எமாத்தியோ , லஞ்சம் வாங்கியோ ,லஞ்சம்கொடுத்தோ ,துரோகம் செய்தோ , ஏன் கொலை கூட செய்ய தயங்குவதில்லை .

     இன்னும் ஒரு சில கோவில்கள்ல பார்த்திங்கனா பூசாரின்னு ஒருத்தர் இருப்பார் அவர் சட்டை போட்டிருக்கமாட்டார் , அழுக்கான வேஷ்டி தான் எப்போதும் கட்டியிருப்பார் .  அது அவரோட வறுமையா கூட இருக்கலாம்  அது போகட்டும் .  அவர் தான் அந்த சாமிக்கு எல்லா பணிகளும் செய்வார் , அவர் வேலையே அதுவாகத்தானிருக்கும் ,  அந்த பூசாரிக்கோ அல்லது அந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கோ , அவர்களது உடலில் சாமி புகுந்துவிட்டதாக சொல்லுவார்கள் சாமி புகுந்த அந்த பக்தரோ , பூசாரியோ தன்னை மறந்த பரவசநிலையில் ஆடுவார்கள் ,பெருமூச்சி விடுவார்கள் ,கத்துவார்கள் , ஏதேதோ பேசுவார்கள் .  அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று யாருக்கும் புரியாது கோவில் பூசாரிக்கோ , அல்லது ஒருசிலருக்கோ தான் புரியும் .
இது போன்ற கோவில்களில் தான் மொட்டை அடித்தல் , காது குத்துதல் , பரிகாரம் செய்தல் போன்ற வேண்டுதல் நிறைவேற்றம் நடக்கும், இக்கோவில்களில் இருக்கும் பூசாரியிடம் பக்தர்கள் தனது குறையை கூறும்போது  உடனே பூசாரிக்கு சாமி வந்து விடும்  உடனே பூசாரிக்குள்  இருக்கும் சாமி உனது குறையை தீர்த்து வைத்தால் ஆடு , கோழி விருந்து தறுகிறாயா?? எனக்கேட்கும் பக்தனும் அதற்க்கு  தலையாட்டி சம்மதம் தெரிவிப்பான் , மொட்டை அடித்தல், காது குத்துதல் நிகழ்ச்சிகளில் கூட ஆடு, மற்றும் கோழி விருந்து நடக்கும் விருந்துக்கு தனது  அண்ணன் , தம்பி, மாமன், மச்சான் ,அங்காளி , பங்காளி என அனைவரையும் கூப்பிட்டு ஒரு கூட்டமாக சாப்பிட வைத்து விட்டு பின்னர் தான் பசி, பட்டினியோடு கிழிந்த உடையணிந்த பரிதாபமாக வரிசையில் நின்று கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு போடுவான்.  எதுக்காக மொட்டயடிதலுக்கும், காதுகுத்தலுக்கும் ,ஆடு , கோழி வெட்டி விருந்து  வைக்கிறான்னே  தெரியல . அனால் ஒன்று   !!  தாரளமாக கறி விருந்து வைத்த மகிழ்ச்சியும் ,சாப்பிட்ட சந்தோஷமும் அவன் அடைந்திருக்கிறான் என்பது மட்டும் நல்லாபுரியுது.

    தனக்கு ஒரு துன்பம்னா கடவுளுக்கு அது செய்றேன் , இது செய்றேன்னு வேண்டிக்கிறான்.  எந்த சாமி கேட்குது ? அது செய் , இது செய்னு .
உயிரை காப்பாத்துற கடவுளே உயிர் பலி கேட்குதுங்குறான், தப்பு பண்ணினால் கடவுள் தண்டிப்பார்னு சொல்றவனே  பயப்படாமல் தவறு செய்துவிட்டு கடவுளுக்கு கமிஷன் கொடுத்து தப்பித்துவிடலாம் என்றும் நம்புறான்.

     பிள்ளையார் பால் குடித்தார்னு சொன்னவனும்  !,அத நம்புனவனும்  !,மெனக்கெட்டு பிள்ளையாருக்கு பால் ஊட்டிவிட்ட வனும்  நம்மாளுதான் !. நம்மாளு !! நம்மாளுதான் !!!

     ஏசுநாதர் சிலை சிரிக்கிறது , அழுகிறது  ,கண்ணில் ரத்தம் வருகிறது என்று சொன்னவனும்  நம்மாளுதான்  !!!

     இவ்வளது சொன்ன நான் ஒரு நாத்திகனான்னு கேட்டா இல்லைனுதான் சொல்வேன் !  பகுத்தறிவாலன்னு வேணும்னா சொல்லலாம்!!, சாமி கும்பிட மாட்டேனானு கேட்டால் அதுவும் இல்லை!!! .  பிள்ளையார் சுழி போட்டுதான் இதை எழுத ஆரம்பித்தேன், பகுத்தறிவாலன்னு சொன்னானே அப்புறம் ஏன் பிள்ளையார் சுழி போடுறான்னு கேட்கலாம் அது ஒன்னும் இல்ல பேனா நல்லா எழுதுதான்னு பார்க்கத்தான்!!!!...


ஜாதி,மதங்கள் மனிதனின் வாழ்வாதாரமா?

பாரதியாரை நினைவுபடுத்துவதற்காக



பெயர்                                சுப்ரமணிய பாரதியார்
பிறந்த                               11 - 12 - 1882
பிறந்த இடம்                   தூத்துக்குடி மாவட்டம்,
                                            எட்டயபுரம்
தொழில்                            கவிஞர்,பத்திரிக்கையாசிரியர்,
                                            எழுத்தாளர்.
இறப்பு                                11 - 9 - 1921



செந்தமிழ் நாடெனும் போதினிலே -- இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே -- எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே -- ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே .


     *****

அன்னையை வேண்டுதல்:
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும் ;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்த நல் லறிவு வேண்டும் ;

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதிமுன் பனியே போல,

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும்  அன்னாய் !



     *****


தேடிச் சோறுநிதந் தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?


மனதில் உறுதி வேண்டும் :::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

மனதி லுறுதி வேண்டும்
    வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும் ,
     நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் ;

கனவு மெய்ப்பட வேண்டும்,
     கைவசமாவது விரைவில் வேண்டும் ;

தனமும் இன்பமும் வேண்டும்,
     தரணியிலே பெருமை வேண்டும் ;

கண் திறந்திட வேண்டும்,
     காரியத்தி லுறுதி  வேண்டும் ;

பெண் விடுதலை வேண்டும்,
     பெரிய கடவுள் காக்க வேண்டும் ;

மண் பயனுற வேண்டும் ,
     வாகன மிங்கு தென்பட  வேண்டும் ;

உண்மை நின்றிட வேண்டும் ;
     ஓம்    ஓம்    ஓம்    ஓம்

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

நெஞ்சு பொறுக்கு திலேயே - இந்த

     நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,

அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்

     அஞ்சாத பொருளில்லை அவனியிலே ,

வஞ்சனைப் பேய்கள் என்பர்  - இந்த

    மரத்தில் என்பர்; அந்தக்குளத்தில் என்பர்;

துஞ்சுது முகட்டில் என்பர் - மிகத்

    துயர்ப் படுவார்; எண்ணிப் பயப்படுவார்.


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

அச்சமில்லை அச்சமில்லை
        :::::::::::::::::::::::::::::

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்டபோதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்துவிட்டபோதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.


கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

பச்சையூ னியைந்த வேற்படைகள் வந்தபோதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே .



:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

உலகை நோக்கி:::::::::::
::::::::::::::::

நிற்பதுவே, நடப்பதுவே பறப்பதுவே, நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே! கேட்பதுவே கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின்நீரோ? -வெறுங் காட்சிப்பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?- இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒருநினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?- அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமே? -இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையு மென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பபவே  உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம்.

******


அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,

அகத்திலே அன்பினோர் வெள்ளம்,

பொறிகளின்மீது தனியர சாணை,

பொழுதெலாம் நினதுபே ரருளின்

நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில்

நிலைத்திடல் என்றிவை யருளாய்

குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்

குலவிடு தனிப்பரம் பொருளே!

 
******
 
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்றன்

போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்

உன்னை-மாயையே!

*******
 
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்.
 
 
*********
 

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;

தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;

வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;

தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1



வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;

பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;

காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!

மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2



வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;

பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு

ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;

ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா! 3



வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;

பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;

கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4



வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;

பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;

நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?

ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5



காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;

வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!

நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6



நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;

செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;

எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!

முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! 7



தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;

வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;

தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்

ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! 8


***********









பல்லவி

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் – மிடிப்

பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.





சரணங்கள்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி

மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம், எங்கள்

பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்

வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,

எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே

எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,

மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,

நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே

நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

சிந்து நதியின்மிசை நிலவினிலே

சேர நன்னாட்டிளம் பெண்களுட னே

சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்

தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு

சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்

ராசபுத் தானத்து வீரர் தமக்கு

நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்

காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்

கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்

நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்

ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம் \n

வானையளப் போம்கடல் மீனையளப்போம்

சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்

சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்

கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்

ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்

உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்

பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)


- மகாகவி பாரதியார்...

......................................................................................


ஓடி விளையாடு பாப்பா -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா -ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

சின்னஞ் சிறுகுருவி போலே -நீ
திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு -நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

கொத்தித் திரியுமந்தக் கோழி -அதைக்
கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்காய் -அதற்க்
கிரக்க படவேணும் பாப்பா
பாலைப் பொழிந்துதரும், பாப்பா -அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான் -அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா
வண்டி இழுக்கும்நல்ல குதிரை -நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும்நம்மை ஆடு -இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு -பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா

பொய்சொல்லக் கூடாது பாப்பா -என்றும்
புறஞ் சொல்லலாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா -ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா

பாதகஞ் செய்பவரைக் கண்டால் -நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா -அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

துன்பம் நெருங்கிவந்த போதும் -நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்ததெய்வ முண்டு -துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா -தாய்
சொன்ன சொல்லைத்தட்டாதே பாப்பா
தேம்பி யழுங்குழந்தை நொண்டி -நீ
திடங்கொண்டு போராடு பாப்பா

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா -நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே -அதை
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஇந் துத்தானம் -அதை
தினமும் புகழ்ந்திடடி பாப்பா

வடக்கில் இமயமலை பாப்பா -தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரியகடல் கண்டாய் -இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா

வேத முடையதிந்த நாடு -நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில் லாதஇந் துத்தானம் -இதை
தெய்வமென்று கும்பிடடி பாப்பா

சாதிகள் இல்லையடி பாப்பர் -குலத்
தாழ்ச்சி உயற்ச்சிசொல்லல் பாவம்
நீதி, உயர்ந்தமதி, கல்வி -அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்

உயிர்களிடத்தில் அன்பு வேணும் -தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடையநெஞ்சு வேணும் -இது
வாழும் முறைமையடி பாப்பா