Wednesday, October 30, 2013

தொர தத்துவம்லாம் சொல்லிருக்கு


> அன்பை விதைப்பது பலம். அதை விதைக்காமல் இருப்பது பெரும் பலம்.

> காசை மட்டுமே தேடி ஓடும் உனக்கு கலை என்பது ஒரு காலணிக்கு சமம். 

> வாழ்க்கை கேள்விக்குறியாய் வளைந்தே இருந்தாலும்
வளைவுகளில் பயணித்து பதிலை தேடிக்கொண்டே தான் இருக்கிறது.

> நீண்ட பயணத்தின் ஊடே அவ்வப்போது எதிர்படும் வெற்றியின் தோல்வியும், தோல்வியின் வெற்றியும் காலத்தின் கைப்பிடிக்குள் கட்டாயமாக்கப்பட்ட ஒன்று தான்

> தனியொரு அரசியல் வாதிகளுக்கு ஊழலில் பங்கில்லை எனில்  இந்த ஜகத்தினை அழித்திடுவோம்.

> கருப்பு தினங்களை கடக்கையில் கூட கல்லடி பட்டுத்தான் கடக்க வேண்டியிருக்கிறது

> இறை தேடியலையும் மீனை இறையாக்கிட இறையாக்கினேன் மண்புழுக்களை.

2 comments: