Friday, October 25, 2013

உயர்ந்த மனிதர்கள்.

 




பெற்றார்கள் பிறந்தோம்  வளர்த்தார்கள் வளரவில்லை !!
ஏனோ தெரியவில்லை ..

பெற்றோர்கள் சிரித்து பார்த்ததே இல்லை !!
மற்றோர்கள் சிரித்துத்தான் பார்த்திருக்கிறோம்...
காரணம் குள்ளம் ..

ஏளனம் செய்வோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை ....
எங்களுக்கோர் துன்பமென்றாலும் யாவரும்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !!
காரணம் குள்ளம் ....

வரட்டு கௌரவ குடிகாரனின் போதைக்கு
ஊறுகாய் நாங்கள் ....

குட்டிச்சுவற்றில் குந்தி கூத்தடிப்பவனுக்கு
குல்பி ஐஸ் நாங்கள் ....

உழைப்பினால் உயரும் எண்ணம் எங்களுக்கு.
உயரம் மட்டுமே முட்டுக்கட்டை எண்ணங்களுக்கு....
முட்டுக்கட்டையை முட்டியும் விட்டிருக்கிறோம் !!!



இப்படி யாரும் பிறக்க வேண்டாம்
பிறந்திருக்கவே வேண்டாம்
ஐயஹோ .....வேறு யாரை நான் மணமுடிப்பேன் ?
குள்ளத்தின் உள்ளத்திற்கு குள்ளத்தின் உள்ளம் தானே பொருந்தும் இங்கே  ?

எப்பொழுது கேட்டாலும் எங்களுக்குள் பயம் தான் இப்பாடல் !!!
"எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப்போலவே இருப்பான் "

பார்த்தீர்களா இங்கேயும்  சிரிக்கத்தானே வைத்திருக்கிறோம் உங்களை.....
அழ வைக்காதீர்கள் எங்களை ........நன்றி ...........................

No comments:

Post a Comment