Friday, October 25, 2013

சொல்லமறந்த நன்றிகள்





ஏதோ ஒரு

இச்சையின்

உச்சம் உமிழ்ந்த

எச்சம் நான் !!

உமிழ்ந்த எச்சம்

உருவமாய்

உருமாறியதும் !

உச்சமடைந்தார்கள்

உச்சமடைந்தவர்கள் !!

உள்ளிருந்த நானும்

உச்சமடைந்தேன் !!

உருப்படியாய்

உலகைக்கான

உண்ணும் கொள்கையும் ! (தாய்)

உண்ணா விரதமும்

உறவினர்கள் ...

பத்து திங்கள்

பசியாறினால்

உள்ளிருந்த !

எனக்காகவும் ..

பத்தாம் திங்களில்

உணர்ந்தேன் !

படைத்தவர்களின்

பதைபதைப்பை !!

கருவெடித்தேன் !

காட்சியாய் அனைவருக்கும் !!

கை இரண்டு ..

கால் இரண்டு.

கண் இரண்டு ..

இப்படி எக்குறையும்

இல்லாமல் !!!

கண்டவர்கள் கண்களில்

ஆனந்த கண்ணீர் !!

நான் கருவாகி

உருவானதை !

உறுதிப்படுத்தி

உருப்படியாய்

உலகைக்கானவும் !!

உலவவும் விட்ட

என் இரண்டாம் (மகப்பேறு மருத்துவர் )தாயை !!

இன்றுவரை கண்டதில்லை !!!

நன்றி மட்டும் அவளுக்காய் ...................

No comments:

Post a Comment