Friday, October 25, 2013

நான் பார்த்திராத என்னவள் இப்படித்தான் இருந்தாள் !!!


அந்தி சாய்ந்த நேரத்தின்

செந்நிற வானத்தை

திருடி பூசியிருந்தால்

தன் உடலில் 


விண்மீன்கள் கூட்டத்தின்

விடுபட்ட எண்ணிக்கைகளை

பகலிலும் பார்க்க முடிந்தது

அவள் சிரிக்கையில் 


மின்னலாய் மின்னும்

அவளிரண்டு இமைகளுக்குள்ளும்..

பெளர்ணமி நிலவின் மத்தியில்

அமாவாசை இருட்டு நிலவை

ஒளித்து வைத்திருந்தால் 


அடர்ந்த மழை பெய்யும் சத்தத்தில்

கலந்திருந்தது

அவள் பேசும் மொழி 


மெல்லிய காற்று தள்ளிவிடும்

இலைச்சருகு போன்றது

அவளது நடை 



அவள் நீண்ட கருங்கூந்தலை

ஒப்பிட இங்கே என்னால் இயலவில்லை 

ஆம் , இப்படித்தான் இருந்தாள் .

No comments:

Post a Comment