Friday, October 25, 2013

எப்போதாவது நானும்


ஐந்து வயதுமுதல் அப்பாவின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து

பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அவதானிக்கப் படுகிறார்கள்.

அந்த அரண்மனை வாயிலில் தான் அவர்கள்

எப்போதும் அமர்ந்திருக்கிறார்கள் .

அவர்களின் முந்தைய நாட்கள் ஏதோ ஒரு

அரண்மனையில் தான் கழிந்திருக்கும் .

அவர்களுக்கென அளவெடுக்காமல் தைக்கப்பட்ட துணியை

யாரோ கொடுத்திருக்க எப்போதும் துவைக்கப்படாமலேயே உடுத்தியிருக்கிறார்கள் .

அவ்வப்போது அவர்களது பசியை யார் யாரோ புசித்துக்கொள்ள எத்தனிக்கிறார்கள்

சிறிதாகவும் பெரிதாவகவும் .

ஐயோ ... பாவம் என்ற செல்லாக் காசுகளை

அவர்கள் பசிக்கான இடுபொருளாகவும் வீசுகிறார்கள்.

அப்போது எப்போதாவது அப்பாவும் …

இப்போது எப்போதாவது நானும்....

No comments:

Post a Comment