Monday, October 28, 2013

முனியம்மாவுக்கு



நீ விதைக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும்

எனக்குள் கருவாகிப்போகிறது .

புதிது புதிதாய் பலப்பல சொற்க் குழந்தைகளை

மூளைப் பைக்குள் சுமக்கச்செய்து விடுகிறாய்.

எனக்குள் நீ பாய்த்துவிட்ட வார்த்தை விந்துக்களுக்கு

நிரந்தர பேறுகாலமென்று ஏதுமில்லை.

நீ விதைக்க விதைக்க நான் பிரசவிக்கிறேன்

விதைப்பதை நிறுத்திவிடாதே...

பெ(உன்னால்)ண்ணால் பிரசவிக்கும்

ஆண் நான்.

4 comments:

  1. அப்டியா....:) நன்றி காயத்ரி தேவி...

    ReplyDelete
  2. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  3. நன்றி தனபாலன் சார்.நானும் பார்க்கிறேன்.

    ReplyDelete