Sunday, October 27, 2013

தத்துவங்கள் பல

  • எனக்கு வேர்கள் கிடையாது. கால்கள்தான் உண்டு .
                                                                     -சே குவேரா
  • அரசாளும் மன்னன் அரசனாக மட்டும் நடந்து கொள்ளவேண்டும். கணவனாகவோ , தகப்பனாகவோ , நண்பனாகவோ நடந்துகொள்ளக் கூடாது. அப்படி நடந்துகொள்ளும் மன்னன் தன்னையும், தன் நிர்வாகத்தையும் தானே சீரழித்துக் கொள்வான்.                                                                                      - சீனத் தத்துவஞான கன்ஃ பூஷியஸ்.
  • மைனராக இருந்த மானுடம் மேஜரானது புத்தகங்களின் அறிமுகத்துக்குப் பின்னர் தான் . - வலம்புரி ஜான்.
  • துயரங்களின் நகைச்சுவையே மனித வாழ்க்கை. - சார்லி சாப்ளின் 
  • மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை.- மாசேதுங்.
  • தோல்வி வந்தால் அது உனக்கு பிரியமானதைப் போல் காட்டிக்கொள். வெற்றி வந்தால் அது உனக்கு பழக்க மானதைப்போல் காட்டிக்கொள்.- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
  • மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல. பலரின் மௌனம்.- மார்டின் லூதர் கிங்.
  • ஒரு துளி செயல் 20 ஆயிரம் வெற்றுப் பேச்சுக்களை விட சிறந்தது. - விவேகானந்தர்.
  •  சமரசம் ஒரு தேவையான ஆயுதம். நம்மை ஆசுவாசப் படுத்திக்கொண்டு வலுப்படுத்திக்கொள்ள, அழிக்க நினைக்கும் பகைவர்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க சமரசம் தேவைப்படுகிறது. - பகத்சிங்.
  • எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்களைச்சொல்லி ஆள்வது கடினம். அதனால் பெரிய பொய்களை சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். - கோயபல்ஸ்.

4 comments:

  1. வலைச் சரத்தின் வழியே வந்தேன்.

    உங்கள் தத்துவங்கள் , உங்கள் தாத்தா விட்டு விட்டு போன சொத்து
    பற்றிய பதிவுகள் படித்தேன்.

    நீங்களும் தஞ்சாவூரா?

    நானும் தான்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. என் தளம் வாசித்ததற்கு நன்றி அய்யா... நான் தஞ்சாவூர் தான்.

      Delete
  2. அழகான தத்துவங்கள் - இல்லையா அண்ணா.... நீங்களும் தத்துவம் சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. சொல்லிடுவோம்டா...காயத்ரி.

      Delete