Monday, February 8, 2016

"இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் குறித்து கவிஞர் யாழி கிரிதரன்.



சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது காலை பதம்பார்க்கும் ஒரு கல்லை நம்மில் எத்தனைப்பேர் எடுத்து தூர போட்டிருப்போம், நம் காயத்திற்கான மருந்திட்டு கடந்தவர்களே அதிகம். அதிலிருந்து விலகி நடந்திருக்கிறார் லஷ்மிசிவக்குமார்.

தான் சந்தித்த விபத்தை, அதிலிருந்து மீண்ட கதையை, புனைவுகளுடன் நமக்களித்த
"இப்படிக்கு... கண்ணம்மா" லஷ்மிசிவக்குமாரின் முதல் நாவல்.

இன்றைய நவீன உலகம் கட்டமைத்துள்ள வாழ்வியல் யதார்த்தங்களே கதைக்களம். முகநூல் வழி தொடங்கும் ஒரு உரையாடல் காதலாகுதல் என வழக்கம் போல் என்றாலும் அதை சொல்லும் விதத்தில் கொஞ்சம் வித்தியாசப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.

ஒரு விபத்து ஒருவனை எப்படி முடக்கும் என்பதும். அதிலிருந்து அவன் மீள்வது என்பது எவ்வளவு பெரிய துயர் என்பதைதான் வலியுருத்துகிறது இந்நாவல்.  அடிப்பட்ட ஒருவரை எப்படி தூக்க வேண்டும் எவ்வாறு கையாளவேண்டுமெனவும் பேசுகிறது இந்நாவல்.

ரத்தவகைகள், உறுப்பு தானம், உடல் தானம் பற்றி நூலில் இருந்தாலும் எங்கும் பிரச்சார நெடி அடிக்கவில்லை. போகிற போக்கில் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய காலகட்டதிற்கு அவசியம் தேவைப்படும் குறிப்புகள் அவை.

கழிவிரக்கத்தாலோ, முகஸ்துதிக்காகவோ சொல்ல முடியத நடையில் எழுதியிருக்கும் லஷ்மி சிவக்குமாருக்கு வாழ்த்துகள்.
அதிக கதாபாத்திரங்கள் கதையோட்டத்திற்கு தடையாக இருக்கிறது அடுத்த நாவலில் பார்க்கலாம்.
அவசியம் வாசியுங்கள் அவருக்கான அடுத்த நாவலுக்கான நீர்வார்த்தல் அதுவாகத்தான் இருக்க முடியும்.

யாழி கிரிதரன் 
22/1/2015

அன்பும் நன்றியும் யாழி.


















முடிவிலி வெளியீடு,
விலை 200ரூ
9994384941

புத்தகம் வேண்டுவோர் கீழ்காணும் எண்ணிலோ மின் அஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம். வங்கிக்கணக்கு விபரம் தரப்பட்டுள்ளது. பணம் செலுத்திவிட்டு தகவல் தெரிவித்தால் வெகுவிரைவில் அனுப்பிவைக்கப்படும்.

அலைபேசி: 9994384941
மின்னஞ்சல்: ptshivkumar76@gmail.com

வங்கிக்கணக்கு விபரம்:
sivakumar.T
kvb sb a/c No: 1191155000063249
IFSC: KVBL00011911
Thanjavur Branch



No comments:

Post a Comment