Thursday, January 18, 2018

லங்கூர் சிறுகதை புத்தகம் குறித்து கார்த்திகை பாண்டியன்

லங்கூர் சிறுகதை புத்தகம் குறித்த கார்த்திகை பாண்டியனின் பார்வை:

லக்ஷ்மி சிவக்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு “லங்கூர்”. யாவரும் வெளியீடு. ஏற்கனவே “இப்படிக்கு... கண்ணம்மா” என்றொரு நாவலையும் சிவக்குமார் எழுதி இருக்கிறார். பெரும்பாலான எழுத்தாளர்களின் முதல் தொகுப்பிலுள்ள கதைகள் அனேகமாகத் தன்னிலையில் எழுதப்பட்டவையாக இருக்கும். ஒரு வகையில் அதுவே எழுதுபவனுக்கு  நெருக்கமான வடிவமாகவும் இருக்கக்கூடும் . ஆனால் லக்ஷ்மி சிவக்குமாரின் கதைகள் வெகு எளிதாக இந்த நிலையைக் கடந்து செல்லும் அதே வேளையில் கதாபாத்திரங்களுக்கு மிக நெருக்கமானதாகவும் அமைகின்றன. வெவ்வேறு நிலவெளிகளையும் மனிதர்களையும் அவருடைய கதைகள் நம்முன் விரிக்கின்றன. குழந்தைகளின் அக உலகையும் நெருங்கிப் பார்க்க விழையும் கதைகள். தனக்குப் பரிச்சயமற்ற தளங்கள் உட்பட எல்லாவற்றையும் எழுதிப் பார்க்க முனையும் தைரியம் இவருடைய பலமென்றால் தேவைக்கதிகமாக நீளும் வாக்கியங்களும் முன் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளைக் கொண்டு கதைகளைச் சட்டென்று முடித்துக் கொள்வதும் பலவீனம் என்று சொல்லலாம். தன்னுடைய கதைகளின் வழியே தனக்கானதொரு தனித்துவமான இடத்தைக் கண்டடைவார் என்பதைச் சொல்லும் கதைகளைக் கொண்டிருக்கும் தொகுப்பு லங்கூர். 





























நண்பர் லக்ஷ்மி சிவக்குமாருக்கு வாழ்த்துகள்.


நன்றி கார்த்திகை பாண்டியன்.
லக்ஷ்மி சிவக்குமார்.
ptshivkumar76@gmail.com
mobile: 99943 84941.


புத்தக விபரம்: 

லங்கூர் 
சிறுகதைகள் 
யாவரும் பதிப்பகம், 
பதிப்பக தொடர்புக்கு : 90424 61472
பக்கம்: 154
விலை:150/-


ஆன்லைனில் எனது இரண்டு புத்தகங்களையும் வாங்க... கீழேயுள்ள லிங்க் கை சொடுக்கலாம்.

https://www.commonfolks.in/books/lakshmi-sivakumar

http://discoverybookpalace.com/products.php?product=லங்கூர்

http://discoverybookpalace.com/products.php?product=இப்படிக்கு-கண்ணம்மா

1 comment: