Tuesday, December 22, 2015

இப்படிக்கு... கண்ணம்மா

"இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் வெளியீடு 19/12/2015 அன்று தஞ்சை பெசன்ட் அரங்கில் மாலை 6 மணிக்கு சிறப்பான முறையில் நடைபெற்றது. முதலாமாண்டு நிறைவாக தஞ்சை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த விழாவில், "இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர். இரா. காமராசு தலைமை தாங்கினார். கவிஞர். கனிமொழி.ஜி.வரவேற்புரை நிகழ்த்தினார். எழுத்தாளர்கள். புலியூர் முருகேசன் மற்றும் செ.சண்முகசுந்தரம் நாவலை அறிமுகம் செய்துவைத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு  உறுப்பினரும், தாமரை இலக்கிய இதழ் ஆசிரியருமான சி.மகேந்திரன் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மருத்துவர். ராதிகா மைக்கேல் மற்றும் தமிழாசிரியர்.மா.அர்ச்சுனன் ஆகியோர் நூலை பெற்றுக்கொண்டு பேசினார்கள். எழுத்தாளர். பசு.கவுதமன், பேரா.பி.சோமசுந்தரம், புலவர். கோ.நாகேந்திரன். ஆகியோர் வாழ்த்துரை செய்தார்கள். ம்.தி.மு.க. தேர்தல் பணிச் செயலாளர்,விடுதலை வேந்தன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஏ.ஐ.டி.யூ.சி. துரை.மதிவாணன். நன்றியுரை யாற்றினார். தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
























No comments:

Post a Comment